Posts

Showing posts from 2018

கஜா புயல்.

Image
ஆண்டின் தொடக்கப்பகுதியில் இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதிகளில் கடும்வரட்சி நிலவியது. இலங்கையின் பகுதிகள் மட்டுமன்றி தென்னாசியவலய நாடுகள் பலதும் வரட்சியை எதிர்கொண்டன. உயர்வரட்சி நிலவும் பகுதிகளில் உயர் வெப்பநிலை ஏற்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.இந்த உயரிய வெப்பநிலை காரணமாக உலகின் எதிர்பார்க்கப்படாத பல இடங்களில் தாழமுக்கமையங்கள் உருவாகி அவை சூறாவளி எனப்படும் புயலைத்தோற்றுவிக்கின்றன.     சூறாவளியால் உலகின் பலபகுதிகள் தொடர்ச்சியாகப்பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேற்கிந்தியத்தீவுகளிலுள்ள கரீபியன் தீவுகள்; தென்சீனக்கடற்பகுதி ;ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி; பிலிப்பைன்ஸ்; யப்பான் ; தென்னாசிய நாடுகள் என புயலால் பாதிப்படையும் நாடுகள் ஏராளம்.        புவியின் சரிவுத்தன்மையாலேயே பல்வேறு காரண காரியங்களோடு இந்தப்புயல் தோற்றம் பெறுகிறது. அதாவது பூமி 23.5 பாகை சரிவு கொண்டு சுழல்வதன் காரணத்தால் பூமியின் ஒருபகுதி சூரிய ஒளியைப்பெறும்போது மறுபகுதி இருளடைகிறது. சூரியஒளிபடும் பகுதி வரட்சி அதிகரிப்பால் விரிவடைந்து மேலேழுகிறது. இதனால் அந்த இடத்தில் வெற்றிடம் ஒன்று உருவாகிறது. அதேவேளை இருள் கொண்ட

குறித்துக்கொள். மறவாதே....❤

Image
இதயத்தில் குடியிருக்க வந்துவிட்டு இடம் மாறத் துடிக்கிறாய். நான் வெளியேறி விட்டதாய் நீயாக கற்பனை செய்கிறாய். உனக்குத் தெரியாதா ஒரு தடவை இதயத்தில் குடி புகுந்தால் இரத்தச் சுற்றோட்டம் போல வெளியேற முடியாதென. இந்த மூச்சு உடலை விட்டு நிரந்தரமாய் பிரிகையில் தான் உனக்கும் எனக்குமான உலகப்பிரிவு. குறித்துக் கொள். அது வரை உன்னை இதயம் பாடலோடு தாலாட்டும். அடிக்கடி முத்தத்தால் குளிப்பாட்டும். நினைவுகளில் பசுமையாய்...... பூத்திருப்பாய். மறவாதே. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

வறட்சி நீங்கி அடைமழை பொழிவாய்

Image
. 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 கொஞ்ச நாளாக அதிக அனலடிப்பு. வறட்சியின் உச்சத்தால் ஆடை தேய்ந்து அம்மணமாகும் கதி கலக்கத்தில் பூமித்தாயின் பெருமல். அவளின் ஏக்கமும் துக்கமும் பெருமூச்சாகி நிலம் பிளந்து வெடிப்புகளை வகிர்ந்தன. அவளின் மெல்லிய பசும் பட்டாடை வண்ணம் கலைந்து சருகுச் சேலையாக கருகிக் கொண்டது. வருந்தி வருந்தித் துடித்ததிலே வதன அழகும் பொலிவிழந்தது. பூத்துப் பூத்து இன்பம் தந்தவள் புளுதி குடித்து காற்றுடன் பறந்தாள். பூமிக்கும்  ஆதவனுக்கும் நடந்த ஊடலின் தகிப்பில் அவர்களை நம்பிய உயிர்களும் நடைபிணம் ஆகின. கரும் மேகங்களைத் திரட்டியுருட்டி கடும் கோபத்தைக் காட்டிய சூரியதேவன் குளிர்ந்து இளகிய தேவியின் மீது ஆவியாய் வந்து அணைத்திடத் துடிக்கையில் பிரிந்தோர் கண்ணீரின் மடைதிற அருவியாய் அடைமழை பலதினம் பெருகிப் பொழிந்தது. ஒப்பற்ற அன்புக் கூடலை உலகோர் ஓடி ஒழிந்தொரு கண்வழி நுகர இல்லத்து சாரளவழி தனில் கண்டே உல்லாசமாய் நுகர்ந்தனர் இன்ப தரிசனம். இரவும் பகலும் இனிதான நனைதலில் இயற்கையன்னை புதுவுடை தரித்தாள். பசுமை மீண்டும் பட்டாடையானது. பூத்தலும் காத்தலும் புதுமெர
Image
ஈழத்தின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் மகிழினி காந்தன் தற்போது புலம் பெயர்ந்து சுவிச்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். அவரின் முதற் தனிப்படைப்பாக" இதயத்தின் சிலிர்ப்புகள் " என்ற கவிதை நூல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அச்சேறியுள்ளது. கவிதையின் பாடு பொருளாகத் தந்துவங்கள் பொதிந்துள்ளன. 66 பக்கங்களைக் கொண்ட இந்தக் கவிதைப் புத்தகத்தை தமிழ்நாட்டு காகிதம் பதிப்பகத்தார் அச்சிட்டு வடிவமைத்துள்ளனர். அணிந்துரையினை யாழிசை மணிவண்ணன் வழங்கியுள்ளார். பதிப்புரையினை மறைந்த நல்லுள்ளத்தோன் மனோபாரதி வழங்கியுள்ளார்.           தந்தையார் தமிழ்மீது கொண்ட பற்றையும் தன்னைத் தமிழ்படிக்க ஊக்குவித்ததையும் என்னுரையில் பதிவு செய்துள்ளார்.200 குறுங்கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பை அமரத்துவம் அடைந்த தனது தந்தைக்குக் காணிக்கையாக்கியுள்ளார்                      தன் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லும் திறன் கொண்ட மகிழினி காந்தன் குறுகிய வரிகளில் நிறைவான கருத்துக்களை விதைத்துள்ளார். கவிதை என்பது ஒரு பக்கப் பார்வையன்று. அது பல்லுருக்காட்டி. பார்ப்பவர் மனநிலையைப் பொறுத்து அதன் பிரதிபலிப்பின் வீர

உனை சேர்ந்தே கலந்திருப்பேன். 🇮🇨🇦🇱🇰🇸🇬🇨🇭🇨🇦🇻🇳🇲🇺🇮🇩🇹🇭🇦🇪🇹🇷🇺🇧🇪🇸🇸

Image
இருதயம் துடிப்படங்க தகிக்கையில் உனது குரல் மொழிக் காற்றசைவு உயிரூட்டும் வந்திடு. முட்டைகள் எல்லாம் மினுக்கத்தில் அழகதே. குத்தாதே உயிர் கொஞ்ச நாள் வாழட்டும். மகிழ்"வூட்டும் கலையுனது அகத்தெரியும் அனல் குறைப்பாய் என்பால் ஒளியேற்று அன்பால். உயிர் மூச்சு பிரிந்தாலும் உலகத்தை வலம் வந்து உனை சேர்ந்தே கலந்திருப்பேன். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

செத்தபின் விழித்துக் கொண்டவன். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

கண்ட இடமெல்லாம் கறையான் புற்றாக காவியுடைக் காதலாய் முற்றும் துறந்தவனின் எழுகை. துட்டுப் பெற்ற எட்டப்பர் நாவுகள் கொட்டும் பொய்யுரை கறைபடிந்த வடுவாய். காலத்தில் பதிவாய். கட்டிய மனைவியை பெற்றிட்ட பிள்ளையை சற்றும் நினையாது ஓடிய அரச சம்சாரி முற்றும் துறந்த முனிவனாகினான். காலம் அவனைக் கடவுளாக்கியது. அவன் போதனைகள் பெருமை பூத்தன. இரத்தமும் கண்ணீரும் மனிதர்க்கு ஒத்த நிறமென்று ஓதியவன் சித்தங் கலங்கி உலக சுகம் வெறுத்தவன் செத்த பின் விழித்துக் கொண்டானோ செய்தது பிழை என்று ஆ ?😄😃 அதனால் தான் கண்ட இடமெங்கும் கறையான் புற்றாக கொண்டெழத் துடிக்கிறானோ யசோதையின் கணவன் ? வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija

கரும்பெல்லாம் இரும்பாகி சுட்டெரிக்கும் மாயம் இது. 💤💤💤💤💤💨💨💨💤💤💨💨

Image
நேற்றுவரை மன மலையில் ஏற்றம் கொண்ட மாளிகையை காற்று வந்து சுழன்றடித்து முறித்தடித்த கனதியினால் கதவுகளும் உடைந்தனவே பாழடைந்த வீடாக மன வீடும் ஆனதுவே. சூறாவளி ஓய்ந்த பின்பும் ஆறாவலி சுமந்து விழிநீர் தாராய் உகுந்துதிர்க்க வேரோடு மணம் கமழும் உன் நினைவுகளே நிறைந்திருக்கு. தேமாப் பூவின் வாசனை உன் நினைவு. தேம்பும் உடல் உருக்கில் வலிந்திழுக்கும் மெய்யுணர்வு. வதனமிழந்த வதைப்பு. வார்த்தைகளால் கோர்க்க முடியா தொகுப்பு. இயந்திரமாய் கழற்றி மாற்றும் இதயம் இருந்திருந்தால் சூறாவளி என்ன....! சுனாமி வந்தாலும் புதிதாய் ஒன்றைப் பூட்டிடலாம். நினைவுக் கோர்வைகளை மறக்க மாத்திரைகள் கண்டிருந்தால் பெருகும் துயரலைகள் கரைந்தோடிப் போயிருக்கும். இயல்பாய் இருப்பதென நடிக்கவும் முடியுதில்லை. இனியொரு விதியென எழுந்திடவும் முடியுதில்லை. பெருந்துயரைப் புதைத்து விட்டு நகரவும் முடியுதில்லை. ஏனிந்த துயரென்று தவிக்காத நாளுமில்லை. எரிமலைக் கொதிப்பாக விழிநீரும் ஓயுதில்லை. கரும்பெல்லாம் இரும்பாகி சுட்டெரிக்கும் மாயம் இது. மீண்டிடத் தான் துடிக்கிறது இதயம்.-தவறி மாண்டாலும் கொன்றவர்கள் வந்தி

வலிதான சிறகுகள் வேண்டும். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Image
விண்ணைத் தொடக் கனவு சுமந்த எண்ணிலா மழலை உலகம் விற்பனைச் சந்தையிலே விலையாக விலையாகி.... துட்டர்களின் துருப்பிடித்த கரங்களிலே சிட்டுக்களின் சிறகுதிர்வு  வதையாக.... வயிறு காய்ந்து வற்றித் தவிக்குது உலகை ஆளும் இளைய சந்ததி. பாலகக் கடவுளரை அரக்கருலகம் பட்டாசுத் தொழிலாளராய் சிறைப்பிடிப்பு. சிந்தை சுருங்கும் மந்த நோய்களால் நொந்து நலிகிறது பிஞ்சுப் பசுமை. போதையுலகம் புகுந்து நல்ல பாதையைப் பிளந்துதிர்க்க வஞ்சக வாதை செய்வோரும் இப்போ வாழ்கிறார் ஒரே வீட்டினிலே... பூக்களை இரசிப்பதற்கு செடிக்கு காப்பிடல் அவசியமே...சிறுவர் உலகினைக் காப்பதற்கும் சிறகுகள் வலிதுடன் வேண்டுமிங்கு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... கடும் வரட்சி....... நாவின் உலர்ச்சி........ கருத்து வெம்மைகள்..... கௌரவ ஊடல்களோடு ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... இயற்கை எமது கைகோர்க்கையில் இதயங்களின் ஈரத்தை வாரி இழுத்து மழையாய் நனைத்து சிலிர்க்கும். கோபத்திலும் கண்டிப்பிலும் உன் பாசத்தை மட்டுமே அன்னமாய் பகுத்துண்கிறது மனம். நீ..... கண்டம் விட்டு கண்டம் ஓடி கண்ணில் படாமல் மறைந்து எங்கு தான் சென்றாலும் ஒரு நாள் வருவாய் காத்திருப்புக்கள் வீணாவதில்லை. வந்து என் வீட்டின் முகட்டை உற்றுப் பார் உனக்காக வாங்கிய தண்ணீர்ப் போத்தல் துடிதுடித்து இறக்காமல் தூக்கில் தொங்கும் வலி சுமந்து தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த........ வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மந்தி கலை(லாய்)ப்பு...

சு....சு.... மந்தியை கலையுங்கோ ..... கொப்புக்களை கிளைகளை முறிக்குது. பழங்கள் காய்ந்த பிஞ்சுகளை வீணாக்கி காலடியில் நசுக்குதே...! அலம்புது புலம்புது அங்குமிங்கும் தாவுது. அடாத்தாய் ஓடி ஓடித்துள்ளுது. அடிக்கடி அலம்புது. சொறியுது பிராண்டுது சன்னை காட்டிக் கத்துது. சு... சு.... மந்தியை கலையுங்கோ... மரங்கள் உரு மாறுது வளங்கள் கெட்டுப் போகுது- எங்கள் மாண்பும் கெட்டுப் போகுது. சு.... சு..... மந்தியை கலையுங்கோ. வெண்கலக் கடைக்குள் யானையாய்-இந்த கண்கடை அற்றது ஆடுது. கசிப்புக் குடிச்ச மந்தியோ? இல்லை கலப்பில் வந்த சனியனோ? ஐயோ! தோட்டந்துரவை நாசமாய் இந்த கொழுத்த மந்தி பிராண்டுதே.! முன்னோர் வியர்வை சிந்தி நட்டதை சின்னோர் விலங்கு வந்து கிளறுதே.! ஐயோ! விழித்த விழியராய் வாருங்கள் மந்தியை மரத்தை விட்டுக் கலைத்திட. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா 04:42PM

வெளிச்சத்தை மூடிவிட்டு வெளிச்சம் தேடும் வித்தகர்கள்.

Image
வீட்டுக்கு வந்த தரகர் கேட்டார் மாப்பிள்ளை அரச உத்தியோகமோ?..... பெட்டைக்கு ஒரு அரச வேலை கிடைக்க வேணும் . உணவை ஒறுத்து அம்மா கடும் விரதம் ........ சமூர்த்திச் சங்கத்தில கால் கடுக்க செல்பட்டுக் காலிழந்த அப்பா. அரச பணத்துக்காக... "கண்கெட்டுப் போவார் இன்னும் வீட்டுத்திட்டம் தரேல்லை." அரசாங்கத்தை திட்டித் தீர்க்கிறாள் பக்கத்து வீட்டுக்காரி...... அதிகாலையில் தம்பியும் தங்கையும் ஓடுகிறார்கள் தூக்க முடியாத அரசின் இலவசப் புத்தகங்களுடன்.... எடுத்தது பாதி எடுக்காதது பாதியாய் ஓடுறா அத்தை அவா அரசாங்கப்பள்ளிக்கூட ஆசிரியர்...... கோழி மேய்த்தாலும் கவர்மன்ற் கோழி மேய்க்கோணுமென்று வேலையில்லா பட்டதாரிகள் வேலைதேடி... கிராம அலுவலர் வரட்டுமாம் ஏதோ குடுக்கப் போறாராம் நீண்ட வரிசையில் எதிர்பார்ப்போடு மக்கள்.... அரச வேலை வேணும் அரச சம்பளம் வேணும். அரச படிப்பு வேணும். அரச சாமான் வேணும். அரச சசலுகையும் வேணும் இதுக்கெல்லாம் வராத வெட்கம். இதுக்கெல்லாம் பற்றி எரியாத புத்தி வெளிச்சம் வெசாக்கூடு வெளிச்சம் பட்டதால் கூசுதாம் குறுகுதாம். வேடிக்கையா இருக்குதடா.

ஒரு காதலின் முகாரி

Image
அன்பே! உன் விழியும் மொழியும் தொட்டுத் தொட்டுத் தீண்டிய இன்பத்தில் இலவம் பஞ்சானது மனச்சிறகு. காதல் படகில் இனிய பயணம்.... கனிந்த உன் சொற்களில் பலாச்சுளை வாசனை .... கனவிலும் உன் திருமுகம் காண்பதால் கண்களுக்கு  இன்ப நுகர்ச்சி..... மௌன ராகத்தில் மலர்ந்து புதைந்து மயங்கிக் கிடந்தேன் நிலை மறந்து... அலையடித்த காதல் சுமந்து கோவில் பக்தனாய் தேடித்தேடி உன் தரிசிப்பை பெறுவதற்கு காரணங்கள் பலநூறை சோடித்தேன். சொர்க்கமே நீ என சுற்றி வந்தேன். காவியக் காதல்கள் பொய்யல்ல உன்னால் உணர்ந்து கொண்டேன். என்னைக் காணும் போது உன் கண்களிலும் காதலிருந்தது. நீ பேசும் போதும் உன் குரலில் காதல் இருந்தது. உனது இதயத்துடிப்பில் எனக்கான காதல் துடிப்பிருந்தது. யார் மீதுமில்லாத கரிசனையில் என் மீதான காதலை உணர்த்தினாய். இப்போதெல்லாம் உனக்கு என்னை நினைக்கக் கூட நேரமில்லை. பேசாதே என்றாய் ..... பார்க்காதே என்றாய்..... அருகிலிருந்தும் அந்நியரானோம். ஏவல் சக்திகளின் நூல் பொம்மை நீயானாய். உன் வேண்டுதல்களை ஏற்று உன் மகிழ்வில் களிகூர்ந்தேன். மௌனங்கள் நிரந்தரப் பரிசானது. நவீன இயந்திரக் கடல்களாய

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

Image
அரசியல் சூதாட்ட அகங்களின் கபடத்தில் அகப்பட்டுச் சிதறியது அடைகாத்த இலட்சியம். சுய நலப் பிரிவுகளால் சொந்தங்கள் நடுத்தெருவில். உயிர்களின் இழப்புடன் தேசத்தின் துகில் உரிப்பு..... இரகசிய அமைதியில் தலைவனைத் தேடி காலக் காத்திருப்பு நீட்சியாய்.... வரமாட்டான் இனித் தலைவன் என்று இறப்பு சான்றிதழ் இல்லாமலே தலைவனுக்குப் போட்டியிட்டன பன்றிக் கூட்டங்கள். பஞ்சமா பாதகங்கள் பரந்தன தேசத்தில்... தலைவிரி கோலத்துடன் தரங்கெட்ட அரசியல்... ஆசன ஆர்வலரின் ஆசனங்களுக்கு  தீ மூட்ட அனுமானின் வால் நீள்கிறது .... பஞ்ச பாண்டவர்கள் தோன்றித் தொடுத்த போரில் மீண்டு கொண்டனர் தேசத்தை மீண்டும். அஞ்ஞாதவாசம் பன்னிரண்டு ஆண்டுகளை புதைத்துக் கிளர்வது. புரியாதவர்க்கு இது புதிர்க்கதை தான். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

அதிசயமே அதிசயிக்கும் ஆற்றல் அரசியம்மா

Image
அம்மா! உன் வயிற்று உதிரப் பன்னீர் கலந்த உத்தமப் பொய்கையில் மிதக்க என்ன தவம் செய்தேனோ?❤ தொப்பிள் கொடிவழி பசியாறி நீந்திச் சுழித்து நீச்சலடிக்கையில் வயிற்றுச் சுவற்றில் வலுவாய் இடிக்கின்றேன். இடித்த போதெல்லாம் இதமாய் தடவி இன்புற்றுவது ஏனம்மா.? ஆசைக் கதைகளும் ஆற்றல் மிகு உணவுமிட்டு முகம் தெரியா உறவு என்னை முழுவதுமாய் ரசிக்கிறாய் நீ. இதோ  ! எட்டி எட்டி உதைக்கின்றேன் கட்டிக் கட்டிப் பிடித்துந்தன் கரங்கள் மகிழ்கிறதே.- நீ அதிசயமே அதிசயிக்கும் ஆற்றல் அரசியம்மா. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija ஓவியத்தின் உரிமையாளர் மகிழினி காந்தன்

புல்லரிக்கும் புதுச்சுகம்

Image
என் அருமைத் தம்பியே நீ யாருக்கடா சாமரம் வீசுகிறாய்? பன்றியோடு சேர்ந்த பசுக்கன்று ஆனாயேடா...? நீ யார்? உன் வம்சம் என்ன? அறிந்து நிமிர்ந்திடடா. அரச பரம்பரையின் மிடுக்கோடு பெண்களும் பெருவீரம் கண்ட மண் உனது. முதியோரும் முள்ளந்தண்டை நிமிர்த்தி அணிநடை பயின்ற மண் உனது. செருக்களத்தில் உன் தலைவன் செருமினாலே எதிரிகள் காலோடு சலமோடும் . சதிவகுத்த சகுனியர்கள் வென்ற கதை நீயும் அறிவாய். வீழ்ந்தது ஒரு காலப் பதிவெனில் எழுவதும் ஒரு சூரிய உதயமடா. செங்குறுதி பாய்ந்த மண்ணை செந்தமிழால் பூத்த மண்ணை பங்கமுறு செய்கைகளை அறுத்தமண்ணை பிழைப்புக்காய் கரம் நீட்டி உழைக்கின்ற சொறி நாய்க்கு சாமரம் வீசுகிறாய் விழித்திடடா. நீ எங்கள் தேசப் புதல்வனடா.. தமிழீழத்தின் முத்தடா. கூத்தாடிகளுக்கும் உனக்கும் சம்மந்தமேன்?  விலகிடடா. உன் தேசக்காற்றை வாழவைக்க உன் கரங்களால் பசுமை சேர். மாற்றான் வீட்டு மாங்காய் இனிக்காது. வியர்வை சிந்தி நீ நட்ட மாமரம் பூத்துக்கனியப் பிடிங்கி உண்பது புல்லரிக்கும் புதுச்சுகம் உணர்ந்திடடா. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

பாழடைந்த சுவர்கள்

Image
அழகான வீடாக்கி என்னை அழகாய் அலங்கரித்து மணமகள் வாழ்விடமாய் தரை வார்த்தார் தந்தையவர். திருமணக் கோலத்துடன் மணப்பெண் அழகிய நாணத்துடன் கதவை மூடியே கும்மிருட்டில்  ஆசையாய் சுவர் என்னில் சாய்ந்திருக்க நல்ல கதைபேசி காதலுடன் இங்கு குதூகலித்து இன்புற்றனர். கண்களை மூடிய இருள் காதினை மூடவில்லை... அடுத்தவர் விடுப்பறியும் ஆசை யாருக்கில்லை...? கூடிக்களித்தவரால் பல குட்டிகள் பிறப்பெடுத்தார்..அவர் சுட்டித்தனங்களிலே நானும் சுந்தர வடிவங் கொண்டேன். இனவாத குண்டுமழை நாட்டில் எங்கனும் விழுந்தது காண். வீட்டுச் சொந்த பந்தமெலாம் அயல் நாட்டைச் சேர்ந்தன பார். தன்னந்தனியனாக நான் தனித்து தவமிருந்தேன். சில கள்ளப் படை வந்து கதவு யன்னலைக் கவர்ந்தன பார். பின்பு கூரை பிரித்தெடுத்தார் என் அழகையும் உருக்குலைத்தார். நாசமறுவார் சிலர் வந்து நடுவீட்டில் மதுக் குடித்தார். சில மோச ஆசாமிகள் வந்து கஞ்சா கசிப்படித்தார். நான் நொந்து நூலாகி பெரும் துன்பத்தில் துவண்டிருந்தேன். பட்டப் பகல் ஒரு நாள் அந்த துட்ட இளைஞனுடன் ஒரு பெட்டைக் கழுதை வந்தாள். அவசரக் காதல் அது மிக அவசரம் படபடப்பு ஐயோ! க

வலிதான சிறகுகள் வேண்டும்.

Image
விண்ணைத் தொடக் கனவு சுமந்த எண்ணிலா மழலை உலகம் விற்பனைச் சந்தையிலே விலையாக விலையாகி.... துட்டர்களின் துருப்பிடித்த கரங்களிலே சிட்டுக்களின் சிறகுதிர்வு  வதையாக.... வயிறு காய்ந்து வற்றித் தவிக்குது உலகை ஆளும் இளைய சந்ததி. பாலகக் கடவுளரை அரக்கருலகம் பட்டாசுத் தொழிலாளராய் சிறைப்பிடிப்பு. சிந்தை சுருங்கும் மந்த நோய்களால் நொந்து நலிகிறது பிஞ்சுப் பசுமை. போதையுலகம் புகுந்து நல்ல பாதையைப் பிளந்துதிர்க்க வஞ்சக வாதை செய்வோரும் இப்போ வாழ்கிறார் ஒரே வீட்டினிலே... பூக்களை இரசிப்பதற்கு செடிக்கு காப்பிடல் அவசியமே...சிறுவர் உலகினைக் காப்பதற்கும் சிறகுகள் வலிதுடன் வேண்டுமிங்கு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

பிறப்பிக்கும் இறைவிகளை சிறப்பாக மதியுங்கள்.

Image
    பெண் என்ற பெரும் படைப்பு கடவுள் தந்த வரம். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பெண்ணாகப் பிறந்ததை சாபமாக கருதினாலும் ஒரு பிள்ளையைப் பெற்ற பின்பு வரும் அலாதிப் பிரியமும் வாழ்வின் மீதான பிடிப்பும் ஆச்சரியப்படத் தக்கது. இது பெண்மைக்குக் கிடைத்த வரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. குழந்தை வயிற்றில் உருவாகும் போதே அதன் எதிர்காலம் குறித்து உள் மனதில் வரைபடம் அமைப்பவள் பெண். ஆண்கள் வெளிப்படையாக சொல்லிக் கொண்டாலும் பெண்கள் அப்படி இல்லாமல் மனதில் கனவு சுமந்து கருவில் சிலை செதுக்கும் அதிசயச் சிற்பி பெண்.          புதிதாகத் திருமணமாகி முதற் குழந்தை கருவாகும் போது பெண்ணின் உடல்நிலையில் சடுதியான மாற்றங்களை உணர முடிகிறது. இதுவரை சாதுவாக இருந்த பெண் முரண்பட ஆரம்பிப்பாள். திருமணத்தின் முன்னர் விரும்பி உண்ணாத உணவுகளை விரும்பி உண்ணுவாள். ஒருவிதமான பிடிவாதம் நிலைத்திருக்கும். தன்னை மட்டுமே கணவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை இருக்கும்.  இந்த மாற்றங்களுக்கு காரணம் புதிதாக அவளுடலுக்குள் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் என மருத்துவ உலகமும் உறுதி செய்கிறது.         எனது முதற்குழந்தை வயிற்றில் உருவாகிய போது

நீயும் என் வாழ்வில் பொக்குளங்களையே பரிசளித்தாய்..... 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

Image
எனக்குத் தெரியும்... நெருப்புச் சுட்டால் வலிக்கும். சுட்ட இடத்தில் பொக்குளம் வரும். ஒருக்கால் வலி உயிரைத் திருகும். பொக்குளம் வீங்கும் வெடிக்கும். வெடித்து வடியும் பொக்குள நீர் உருகி எரிவு தரும். காற்றுப் பட்டாலும் எரியும். காற்றுப் படாவிடினும் எரியும். சிறிது காலத்தில் பொசுங்கிய இடம் தடயமாய் படர்ந்திருக்கும். நோவிருக்காது. நொந்த நினைவிருக்கும். துடித்த துடிப்பின் கனதியிருக்கும். அடிக்கடி வடு கண்ணில் படும். வதைப்புக்களும் நெருப்பை விட கொடியவை தானே..... பூக்களின் பிரசவ வலி மனிதர்க்கு கேட்பதில்லை. அது அண்டசராசரத்தையே அதிர வைக்கும் மிகை ஒலி. என் இதயம் பூமிக்கடியில் புதைந்து பாதாளச் சதுக்கத்தில் வெடித்துப் பிளப்பது உனக்குக் கேட்காது. ஒவ்வொரு கதவுகளையும் நீ மூடும் போதும் நினைக்கவில்லையே உன்னைத் தேடி தேடி வந்திருக்கிறேன் என்பதை. நான் முடியுமான வரை தட்டிய சத்தத்தை செவிமடுக்கலையே..... உனக்கும் எனக்குமான இடைவெளியை நீ பணத்தைக் கொண்டு அளவிட்டாயா? பணம் என்னிடமும் போதியளவு உள்ளது. எனக்கு ஒரே ஒரு கவலை தான் நீ அடிக்க விரட்ட உன்னைத் தேடி வளர்ப்பு நாயைப் போல சுற்ற

காற்றோடு சலசலத்த புதிய கதை. 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Image
நீரோடும் வீதியிலே நாரறுத்து வேரழ தறித்தமரம் கிளையிழந்து இலையிழந்து கிளை சூழ்ந்த உயிரினமிழந்து விம்மிப் புடைத்து விஞ்சியழுத வலி தெறித்து வேரோடு பிளவுண்டு வெறித்தனமாய் முளைத்ததொரு முளை. முளையிலே இலை துளிர்க்க சடைசடைத்து பரந்ததங்கு கிளை. வேரின் வெப்பம் குளுகுளுத்த குளிர் கண்டு கும்மி பாடியது  நதி நீர். மீண்டும் கிளைகண்டு கிளர்ந்து வந்த பறவையினம் பாடலும் தழுவலுமாய் பற்றிப்படர்ந்து  பறந்து கிலுகிலுத்தன. சில்வண்டு சுருதி மீட்ட பொன் வண்டு தலையாட்ட குயில் ராகம் குவித்து நல்ல விருந்தாடல் மீண்டுமங்கு அரங்காடியது. வேரறுத்த கூட்டமும் வந்து நின்று வெக்கை தீர இளைப்பாறியது. வாழ்க்கை வாழவும் வாழ வைக்கவுமே என்ற ஒரு செய்தி இலைதழும் காற்றோடு சலசலத்தது. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

தடம்

Image
உருகும் மெழுகாய்  அன்பு. உருக்கும் தீயாய்  கோபம். உருக்கிய தீ தீய்ந்திடும். உருகிய தடங்கள் பதிவாக. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

தெளிவு

"உயிர்களிடத்தில் அன்பாயிரு". கருக் கொண்ட கருத்தைப் பரிசோதித்தேன். கருச்சிதைவாய் போனது. தாய்க் கடவுளர் விடையிலே ஊர்கோலம். தனையனோ மயிலேறி.  சிறு பிராணி எலியோ பருமனில் நசியுது. ஊர்ந்தோடும் பாம்பு காட்சிப் பொருளாய் கழுத்தில். பாம்பை படுக்கையாக்கி தம்பதிகளின் கொண்டாட்டம். பூக்களின் படைப்பு பெண்கள் அரியாசனம். ஆணுக்குப் பிறந்த பிள்ளை புலியேறி சவாரி. அடுக்கி அடுக்கி பார்க்க மலராத போதனைகளோ என நொந்து தான் போனேன். உதித்தது ஒரு  தெளிவு. இந்தக் கெடுதிகளை செய்யலாகாதென. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

பொட்டு.

Image
வெள்ளைத் துகிலுடுத்த விழிகளுக்குக் கூட அழகிய கறுத்தமணிப் பொட்டு. விழிகளும் உற்றுநோக்கா வெற்றிடம்..... விதவைகளின் நெற்றி. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

இரவும் பகலாகும் வரம் வேண்டுமே. ☀ ☀ ☀

Image
     ☀ இரவும் பகலாகும் வரம் கிடைத்தால் கவலைக் கிடங்குகள் கழிப்பிடங்களாகி விடும். ஓய்வுப் பொழுதெல்லாம் உராய்வாய் தணல் மூட்டும் உடைந்த நினைவுகள். உடைந்தே போய்விடும். கற்கள் முட்கள் கிழித்து வரும் கதறல் கண்ணீர் ஓய்வது போல் சொற்கள் தீட்டி அறுத்த வலி சொந்தமின்றித் தொலைந்து விடும். அனிச்சம் மலர் தான் மனமானால் அதிர்வைத் தாங்குமோ அதனியல்பு? ஓய்வில்லாப் பொழுதாயின் வலியின் சுமையும் சுகமாகுமே. நிரந்தர ஓய்வு வரும் வரைக்கும் இரவும் பகலாகும் வரம் வேண்டுமே. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

தரம்

Image
          🌷      💦     🌷 சூரியன் சுட்டுவிடுமென்று தாமரை தன் மலர்ச்சி குறைப்பதில்லை. தாமரையை  தரம் தாழ்த்த நீர்நிலை தன் மட்டம் தாழ்வதில்லை. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

கன்னமிட்ட காதல் ❤❤❤❤❤❤❤

Image
ஆங்காங்கே மேகத்திரை ஆடையால் மறைத்தொருகால்  மறைக்காது இன்னொருகால் கவர்ந்திழுக்கும் வான் மதியை கன்னக்கோலிட்டு ... சாளர வழியாக்கி.... கண்கள் பருகுவதில் சுவையுண்டு. நிலவும் விழியும் சந்திக்கும் நித்திய காதல் அசைவில் மலரும் குழந்தைகள் தானோ..?? இருளை அழகூட்டும் விண்மீன்கள்? வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

இயற்கை வழிகாட்டி 🍀🍀🍀🍀🍀🍀🍀

Image
தாவரத்தின் செழிப்பு கண்ணுக்குக் குளிர்ச்சி. நீரோடும் மண்ணோடும் போராடும் செழிப்பூட்டும் வேர்களின் தியாகம் பறைமுழக்கம் ஆவதில்லை. ஒளியோடு காற்றோடு  புணர்ந்து புன்னகைத்து இலைகளும் போராடும் விளம்பரம் இன்றி(க்) கனிகொடுக்கும். போராட்டமில்லாத வாழ்வு பிணமான வாழ்வே. நிறைகுடப் போராட்டத்தின் நல்ல குறிகாட்டிகள் தாவரங்கள். தற்போசணிகள் எப்போதும் இரந்துண்டு  வாழ்வதில்லை. தன்நிழலைச் சேர்ந்தோரை தவிக்கவும் விடுவதில்லை. தந்திரமாக கொடுத்துக் கொடுத்தே இனத்தைப் பெருக்கும். நேரந்தவறாத வேலை... ஓய்வில்லை. ஓய்வதுமில்லை. மௌனத்தில் மறுமலர்ச்சி...... போராடும் பொறுமை காக்கும். முக்கி முழங்காத போராட்டம்.... கண்ணைக் கவரும் செழிப்பு.... இடத்தின் குறிகாட்டும் பண்பு.... ஆர்ப்பாட்டமில்லை.... அணிவகுப்பில்லை.......ஆனாலும் நிலைத்திருப்பில் சிறப்பு........ நிழலோடு குளிரூட்டி அழகோடு பூத்துக் காய்த்து இலையோடு பூவும் தண்டும் வேரோடு பட்டை என தன்னில் நிறைந்ததை தானமாக்கும் தாவரங்களிடம் கற்றிட நிறைய உண்டு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija 4:12 pm

இதய முற்றத்தில்..... ❤💚❤💚❤💚❤💚❤ 🐤🐦🐤🐦🐤🐦🐤🐦🐤🐦

Image
"அன்பைத் தருகிறேன். ஆயுள்வரை எடுத்துக்கொள்." என்ற உன் திருவாயால்..... இப்போ.... "அதுக்கு வேற ஆள பாரு" என்கிறாய். உண்ட மிட்டாயை உடனே தா என்று சிறு பிள்ளை போல அடம் பிடிக்கிறாய். சிரிப்பு வருது உன் செய்கை கண்டு. "அன்பைத் தருகிறேன் ஆயுள் வரை எடுத்துக்கொள் " இவை எனக்காக உன் இதயம் சிலிர்த்த சிலிர்ப்பு. இதயத்தில் எழுந்த வாக்கொளி. அந்தக் குளிர்ச்சுவையை அந்த ஒளிவடிவை நானிழக்கத் தயாரில்லை. ஆயுள் முடிந்த பின்னும் உன் அன்பில் நனையும் அழகிய வரமது. "விதைத்தவை தான் அறுவடையாகும்" என்கிறாய். குஞ்சு பொரிக்கவும் கதகதப்பான அடைகாப்புத் தேவை. என் அன்பு முட்டைகளை உன் கோபத்தின் கதகதப்பில் அடைகாத்துக் கொள். அவை அழகான குஞ்சுகளை நிறைவாகப் பொரித்து இதயத்து முற்றத்தை நிறைத்து மென் மொழியால் அழகூட்டட்டும். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
மாய்மாலம் காட்டும் கள்ள நெஞ்சர்கள். செத்துத் தொலையட்டும். 🌷🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀 மீண்டும் போர் வேண்டாம். காணாமல் போனோர் வேண்டாம். கல்லறைகள் வேண்டாம். தாயிழந்த பிள்ளைகளின் தவிப்பு வேண்டாம். நிந்தம் நித்தம் அழும் துயரம் வேண்டாம். அங்கமிழந்த அவலநிலை வேண்டாம். நட்பை இழந்த சோகம் வேண்டாம். குருதி பாயும் தேசம் வேண்டாம். அவலம் சுமந்த காலத்தில் விடுப்புப் பார்த்த வீணர் வேண்டாம். சொகுசாய் இருந்த அயோக்கியர்கள் துன்புற்றோரை செம்மறியாய் மேய்க்க வரும் இழிநிலை வேண்டாம். துன்புற்றோர் கண்ணீரைக் காட்சிப் பொருளாக்கும் அரசியல் கயவர்கள் வேண்டாம். தூண்டி விட்டுக் குளிர்காயும் துட்டர்களும் வேண்டாம். ஓடி ஒழிந்து வீரம் பேசும் ஓநாய்களும் வேண்டாம். தமிழ் இனத்துக்குள்ளேயே பல உயர்வு தாழ்வுப்  பேதமைகள் ஒரு கொள்கையில்லாத பல ரட்சகர்கள் ராட்சதராய்..... ஒரு கதிரை ஏற பலரை வசைபாடும் தமிழ்த் தலைமை தீ வாய்கள். ஒற்றுமை ஒற்றுமை என ஓதுவாரிடையே ஒற்றுமையில்லையே அவரேன் நமக்கு? கும்பி(வயிறு) கொதிக்க குண்டுகள் உயிர் குடிக்க உயிர்களை இழந்து உறவிடம் தொலைத்து நொந்து நொந்து நடந்த வரலாற்றை வந்துதித

எஞ்சிய காலம்..... 💓💓💓💓💓💓💓

Image
சிறகு விரித்து அருவி குளித்து உயரப் பறந்திட வா.! - இந்த வான வெளியை பறந்து அளந்து பலதும் அறிந்திட வா.! -வண்ண கலவை குளித்த நிலவில் ஒருநாள் கதைகள் பேசிட வா.!- மனம் மயங்கிமயங்கி நிலவில் உறங்கும் வரங்கள் பெற்றிட வா.! வாழ்வின் எஞ்சிய காலம் வாரிக் கொடுப்பதில் கைகள் சிவந்திட வா.! -அந்த சிவந்த கரத்தின் திடலில் மலரும் மலர்கள் இரசித்திட வா.! செக்கச் சிவந்த கதிரவன் ஒளியை கண்ணில் ஏந்திட வா.! இந்த உலகில் தீய ச(ங்)கதி அழிக்கும் விழிகள் சுமந்திட வா.! - நல்ல தாயின் கருவில் மலர்ந்த திருவென மனங்கள் போற்றிட வா.! -இதய சிலிர்ப்பில் சிலிர்த்து உயிர்ப்பில் நனையும் அன்பில் குளித்திட வா.! வாழ்வின் எஞ்சிய காலம் நெருடும் அலைகளை நெம்பித் தள்ளிட வா.! -நல்ல கனவு பலிக்கும் காலம் சிறக்கும் கரங்கள் கோர்த்திட வா.! வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

தோற்றுப் போன நீதியாகுமோ ???? 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚

நீதித்தாயே! நீயும் ஒரு தாய் தானே. ? குற்றஞ்சாட்டப் பட்டவர் குற்றங் களைய முடியாத கண்கட்டிய வித்தைக்காரி  நீ. காலக் கடத்தலில் கடந்தேகும் இளமைக் கனவைப் புதைத்திட்டாய். தாயும் சேயும் இணையும் கோல வாழ்வு தன்னைக் குலைத்திட்டாய். நடையாய் நடக்கும் முதுமைத் தாயின் நரையில் வலியை விதைத்திட்டாய். பெற்றவள்  மகவைக் கொன்றிடச் சொல்லும் கொடிய வதைப்பை கொடுத்திட்டாய். வசந்தகால வாழ்வைப் பறித்து வடுவை உன்னில் பதித்திட்டாய். விடியல் காணா விழியைத் தாங்கி விழியுள்ளோர் வழியை சிதைத்திட்டாய். இருபத்தேழாண்டாய் ஒரு குற்றங்களைய முடியாத உன் தராசு பிடித்த கரங்களிலே இன்னும் வலி ஏறலையே.... சாதனை படைத்தாய் வாழியவே...! உரத்துக் கத்தும் நீதிக்குரல்கள் ஒலி புகா  மரத்த காது பெற்றாய் வாழியவே..! தமிழக நீதித் தாயே! இதோ!   உனக்கொரு சந்தர்ப்பம். உன்னோடு பேசவே வரம்தந்தது  உச்ச நீதி மன்றம். சரிவர அணிந்து நீதிநிலை நாட்டு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

நேருக்கு நேர் மோத வருவீர். 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Image
திறனோடு போராடும் வலிதில்லாக் கோழைகளே! நீவீர் பலபேர் முயங்கி உதித்த படையலின் வடிவங்கள் தான். வந்த வழியும் சரியில்லை வளர்ப்புச் சரியில்லை. வெந்து சாகுங்கள் உமையீன்றோரை தரந்தாழ்த்த வைத்த செயலாலே நொந்து சாவுங்கள். நெஞ்சில் உரமில்லாக் கோழைகளே ! ஒரு தகப்பன் உயிரூட்ட ஒரு தாயின் அமுதத்தை ஏழு வயது வரை பருகியவளின் முகத்தோடு மோதிட வருவீர். திறனோடு மோத வலிதில்லாக் கோழைகளே ! திடமிருந்தால் மறைந்தோடாது நேருக்கு நேர் மோத வருவீர் . வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

வழிகாட்டிகளை வாழ்த்தும் நாள்....

Image
விழிகளில் ஒளிரும் ஒரு வித நளின பார்வையின் கோர்வையில் கோபமும் சாந்தமும் கேட்டியாய் குறிகாட்டும். ஆழ்துளைக் கிணறு போல் அகத்திலே மறைந்திட்ட ஊற்றினைப் பெருக்க நின் அறிவுக் கருவிகள் திடமூட்டும். நேரிய வழியை காட்டவும் வாழ்ந்து காட்டவும் உமது வாழ்நாளின் சுகதுக்கம் மறைத்தொளிர்வீர். தியாகத்தின் வேர்களை கருவெனச் சுமந்திடுவீர். குற்றமறுப்பதில் மெல்லின கூராயுதம் தாங்கிடுவீர். கற்பிக்காமலே உம் செயலால் மனப் பொற்கோவிலில் மானசீகக் குருவாயும் மறை பொருளாய் எழுந்தருள்வீர். ஞானம் சுற்றுவதும் சுழல்வதும் குருவின் ஈர்ப்பு விசைப்படியென வாழ்வின் எல்லை வரை இயம்பும் வளமூட்டிய நல் மாணாக்கர் விதியுரை. காடும்பாடும் கருத்துடனே ஆடும் அசையும் பொருளெல்லாம் நீக்கமற நிறைந்த அறிவொளியாய் நீண்டொளிரும் புகழ் கதிரொளியாய். வானிடையே வெள்ளைத் திரள் மேக அலையோடு அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் ஒளிர்கின்ற முழுமதியாய் நெடுவானில் பவனி வரும் உமது புகழ். வாழ்க ஆசான்களின் அரும்பணி. பெரும்பணி பிள்ளையை தாமீன்ற சேயாய் நினைந்துருகி கையணைத்து கை காட்டி வழிப்படுத்தும் அதிசய வரப்பணி. பரந்திர
கடிதம் ------------- எழுதுகோலுக்கும் கடதாசிக்கும் அழகூட்டிய முத்தம் கடிதம். பத்திரமாய் இதயத்தோடு அடிக்கடி மெய்யுருகி அணைத்த பொக்கிஷம் கடிதம். இதயங்களின் இனிய எண்ணத்தைச் சுமந்த காலைநேர பூபாள ராகம் திருமுகம்( கடிதம்) அன்பின் திருமுக தரிசனத்தை படியெடுத்தனுப்பிய தூதறிக்கை கடிதம். காகிதமும் அன்புடையார் கன்னங்களாகி கலந்துருகிய கழிமுகத்திடல்  கடிதம். கிறுக்கல்கள் எல்லாம் சொல்லோவியமாய் தரிசனம் தந்த அழகிய அழைப்புமணி  கடிதம். இன்றும் காகிதமுண்டு எழுது கோல்களுமுண்டு காலப்பெருவெளி அரித்த கண்காட்சிப் படிமமாய் கடிதம். உணர்வுகளைச் சேகரித்த ஊற்றறிக்கை தூர்ந்ததுவோ ? தொலைந்த மனிதத்தை மலர மலர்வாய் திருமுகமே..! வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

சுகம் நிறைந்தவள்.......

Image
வானமகள் ஜாலம் காட்டிக் குதூகலிக்கும் ஒரு இளமாலைப்பொழுது. மெல்லிய கீறலாய் இளம்பிறை சிவந்து சிரித்துக் கொண்டிருந்தது. கடற்கரைக்காற்று இதமாகத் தேகத்தில் புரண்டு மனதைச் சீண்டிக்கொண்டிருந்தது. நினைவுகளும் இனிமையாகி..... விநாடிகள் துரிதகதியில் பறந்து நிமிடங்களைத் தொட்டுவிடும் துடிப்பில் இயங்கிக்கொண்டிருக்க, நானும் அவளது நினைவுகளை மீட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அவளைப் பார்த்து இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டன. இன்னும் சில தினங்களில் அவளை மீண்டும் பார்க்க முடியும். அவளைப் பிரிவதென்பது ஏக்கமான வாழ்க்கையே.           சொல்லும்படியாக அவள் பேரழகியல்ல. ஆனாலும் பார்த்தவர் மயங்கும் அழகு விழிகள். சுட்டியிழுக்கும் வசியப் பார்வை. அப்பப்பா....அந்தக் கண்களுக்குத்தான் எவ்வளவு சக்தியடா!  கறுப்போ சிகப்போ மா நிறமோ என்று கூறமுடியாத ஒருவித அழகு. அலையலையாக முன் நெற்றியைத் தொட்டாடும் சுருண்ட கூந்தல். அழகான சிணுங்கல் சிரிப்பு. பார்த்தவர்கள் வியக்கும் உடல்வாகு. இத்தனைக்கும் சொந்தக்காரி சுகநிதா.    **** இயந்திரமாய் சுழன்று அலுவலகக் கதிரைக்கு விடை கொடுத்து, பேருந்தில் புதைந்து, அலுத்துக் களைத்து வீடு போய் அவளத

புதுப்பிப்போம். 🌟🌟🌟🌟

Image
உள்ளக் காதலோடு   உள்ளத்தால் உன் தோளில் சாய்கிறேன். சிலிர்க்கும் சிறகுகளை தளர்த்தி வாரிக் கொள்கிறாய். உலகத்துப் பூக்களெல்லாம் திரண்டு உச்சிவழியேகி இதமூட்டும் இன்பக்கிளர்ச்சியாய்  தேகம். உன் விழிப்பார்வைக்குள் என்னை விழுங்கிக் கொள்கிறாய். கண்களும் காந்தமாகப் பற்றும் காந்தக்கலை தான் காதலா? தேகத்தையும் தேனாக மெழுகாக கரைந்துருக்கும் உணர்வு தான் காதலா? குரலிலே குதூகலத்தையும் மௌனத்திலே தவிப்பையும் நெஞ்சுக்கூட்டுப் பறவை அனுபவிக்கும் இருநிலையா காதல் ? காதல் எந்த வகையாய் இருந்தாலென்ன? நீ மட்டும் என்னிரு விழிகளால் என்னை விழுங்கிக் கொள்ளும் அந்த அடர்த்தி குறைந்த உள்ளத்தால் இன்பக் காற்றில் இணைந்து பறப்போம். வா... என் காதலின் பேரின்பமே.... உலகையும் அண்டசராசரத்தையும் நொடிக்கு நொடி காதலால் புதுப்பிப்போம். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

உணர்வாய்....உணர்வாய்...... 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

Image
நிலவோடு நீ பேசும் ஓர் நாளில் நானங்கு இருப்பதாய் நீயுணர்வாய்.... அன்றுன் மனம் பேசும் மடை திறந்த வெள்ளமென கரைந்தோடும் நீர்த்துளிகள் கண்மீது வெப்பூட்டும் நெஞ்சமும் பதைபதைக்கும். போர் தின்ற காயங்களை பொறுத்துலகில் வாழ்ந்ததையும் பெருமையாய் நீ நினைப்பாய். கடந்த பெரும் காலத்தை தனிமரமாய் தாங்கியதை நினைந்து நினைந்து நெக்குருவாய்.. வாழ முடியாத வாழ்வொன்றை இலாவகமாய் கடந்ததையும் உவகையுடன் மனங்கொள்ளுவாய்... சிரித்தபடி இறந்திருந்த என்முகமும் உன் நினைவில் அடிக்கடி வந்து மறையும். நிரந்தரமில்லாத வாழ்வினை கடந்தோடும் கடிகாரம் கடிந்திடாமல் கூறி நகரும்.-இனி யாரையுமே வெறுத்திடாமல் நடைபோட வேணுமென என் வாழ்வு உனக்குரைக்கும். நிலவோடு நீ பேசும் ஓர் நாளில் நானங்கு இருப்பதாய் நீயுணர்வாய்.... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மீண்டும் சுட்டி விளக்கில்.... ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

Image
என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய்? உன் திடீர் வருகையால் குதுகலித்து படபடக்குது காற்று.... சட்டெனக் கொட்டிய நீர்க்கோர்வைக்குள் புகுந்து ஆடைகளைச் சேகரிப்போர் அவலத்தை ரசிக்கிறாய்.... சட்டப்படி வா என்றுனக்கு கட்டளையிட நாம் யார்? தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் உன் இயல்பில் ஏனிந்த மாற்றம்? தேக்கி வைத்த அன்பை எல்லாம் கொட்டிப் பொழிந்து தீர்க்கிறாய். இதமாக ஒரு காற்றை தேகத்திலே பூசுறாய்.... மகிழும் ஒரு புன்னகையை மின்னலென தீட்டுறாய்... மனதில் உள்ள காதலை நீ முழங்கி முழங்கிப் பாடுறாய்... இரவை அணைக்க ஒளிகளை நீ தடைகள் செய்து பூட்டுறாய்... மீண்டும் அந்த சுட்டி விளக்கை ஏற்ற வைத்தே சிலிர்க்கிறாய். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

விறைத்துப் போன இதயத்திலே.... ❤❤❤💔💔💔💔💔❤❤

Image
மரத்துப் போன இடமாக முட்கள் புதைந்த இதயம். நீயும் சில முட்களையே வீசிச் செல்கிறாய்.... இன்னும் இந்த இதயம் தாங்குதிறன் கொண்டதோ என பரிசீலிக்கிறாயா? விறைத்துப் போன இதயத்திலும் இரத்தம் தானுள்ளது. உன் பரிசீலனை முடிவதெப்போ? வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

நதி நிலை நியதி. வாழ்விற்கு பெறுதி. 💦💦💦💦💦💦

Image
உச்சி விழுந்த நதிகள் உருண்டோடலே இயல்பு. கீழே...கீழே...கீழே....என்று பணிந்தோடலே நியதி. நதிகள் ஓடும் இடங்களெங்கும் விதந்தாடிடும் பசுமை. கரையைத் தழுவி நுரையைச் சிதறி மகிழ்ந்தாடுமே விரைவில். பள்ளம் தேடிப் பாய்ந்தோடிடும் உள்ளம் கொண்டது நதிநீர். ஓடும் நதிகள் கூவமானால் நாறிப்போகுமே நிலநீர். குடத்தில் குளத்தில் ஏந்திய பின்னும் குடைந்தோடுமே கடலை. நதிகள் மலை மீள்  ஏறுவதில்லை. தேடினும் அது கை கூடுவதில்லை. நதிக்கு மலை நிரந்தர வாழ்விடமல்ல. போகும் இடமெலாம் பொழிவை வழங்கி புன்னகைப்பதே நதியதன்  இயல்பு. நதியாய் ஓடு ..... நதியாய் வாழ்வளி..... நிரந்தரமில்லா வாழ்வை உணர நிமிர்ந்து நோக்கு நதி நல்லுதாரணம். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

விடுதலையிரவுகள்....... 🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃

Image
கடந்து போன இரவுகளைச் சபிக்கிறேன். தொலைந்து போகட்டும் அந்த சுமை ஏறிய இரவுகள். சுவருக்குள் நசுங்கிய இரவுகளின் கண்ணீருக்கு விடுதலை. ஆகா....!!! இரவின் வெட்டை வெளியில் பட்டுத் தழுவும் காற்றை இப்போதெல்லாம் மனம் ரசிக்கிறதே....! இருளோடு இருளாக பறக்கும் பட்சிகளுக்குத் தான் எத்தனை கனவுகள்.... அசைந்தாடும் தலைபெருத்த மரங்கள்... நாசியை நனைக்கும் இரவுப்பூக்களின் வாசனை.......எல்லாமே தனிமையிலும் அழகாயுள்ளது. அடைக்கப்பட்ட சுவருக்குள் கிடைத்த மகிழ்ச்சி என்ற அவலத்தைவிட. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹

Image
புதுப் பாதை தந்தாய். காலப் பெருவெளியில் நகைக்காத இடமும் தந்தாய். இருவிழியூடு அகவிழியை அகலத் திறக்க பாசக்கயிறானாய். வீசி ஒருவகை நேச விதையை நெஞ்சத்தில் விதைத்தாய். தமிழையும் தமிழ்ப் பெருமையையும் இகழாத ஏற்றம் தந்தாய்.. உயிரகத்தால் பிரியும் போதும் உன் பெயரை உச்சரிக்கும் உயர் நிலையைத் தந்தாய். கண்டிப்பிலும் பாசம் கைகோர்க்கும் என்பதை நினைந்து நினைந்து உருக வைத்தாய்.... அன்பிலே நீ ஒரு  புது ரகமென அறிய வைத்தாய். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மூகமூடி சிரிக்குது......... மனம் மூடி அழுகுது.

Image
தொலை தூரமிருந்தாலும் தெவிட்டாத தேனமுத குரலாலே மகிழ்வு தந்தாய்... நெருங்கி வந்த போதினிலே நெருப்பாக சுட்டெரித்தாய். முகம் பார்க்க முடியாத தொடுவானம் நீ ஆனாய்... நேரில் காணாத போதிலும் -பாரில் பெருபகை நானானேன். இன்னும் குறையாத காதலுடன் முதன்முதல் முகமூடி நானணிந்தேன். குமுறிக் கொதிக்கும் என் உள்ள எரிமலைக்குழம்பு விழிச் சிகரத்தால் விடுவிடென கன்னத்துப் பள்ளத்தாக்கால் பாய்ந்து ஆவியாகும் கோலமதை நீ காணக் கூடாதே.... முதன் முதலாய் நான் முகமூடி அணிந்து கொண்டேன். என்னை கரைக்கும் உன்மீதான காதல் உன்தன் வெறுப்பில் எரிந்தும் ஒளிர்கிறதே. யாருக்கும் தெரியாது  மனதை மறைக்க முகமூடி அணிந்தேன். -அந்த மூகமூடி சிரிக்குது...உள்ளிருக்கும் மனம் மூடி அழுகுது. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija

வெற்றி வெற்றியே....

Image
ஒவ்வொரு விடியலும் புதிய புதிய சக்தி தரட்டும். ஒவ்வொரு நிமிடமும் மனச் சிறகில் நல்ல பலத்தை தரட்டும். ஒவ்வொரு ஜீவனும் நிறைவுடனே புன்னகை சிந்தட்டுமே... ஒவ்வொரு காரியமும் இனிதாக துலங்கட்டுமே... புதிய விடியல்... புதிய கீதம்.... புதிய மலர்கள்.... புதிதாகட்டும் புதிய வாழ்வு... கடவுள் என்னோடிருக்கிறார்.... நான் மகிழ்ச்சியானவன்.... நான் வெற்றியுடையவன்..... நான் ஆற்றலுடையவன்... என்றும் வெற்றி வெற்றியே..... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

குற்றச்சாட்டு 🌷🌷🌷

Image
இந்த தண்ணீருக்குத் தான் தாமரை மீது இத்தனை காதல்.... தாமரைக்குப் பாரமாகாது  கீழிருந்து தாமரையை தன்மடிமீது   ஏந்தி... தாமரை அழகிலும்.... தாமரை மகிழ்விலும்.... மறைந்து கரைகிறதே.... இந்தப் பார்வையாளர்களோ புனித அன்பைப் புரியாமல் ஒட்டிக் கொள்ளாத உறவென குற்றம் சாட்டுகிறார். விம்பங்களில் இன்பம் காண்பதும் அழகு தானே.. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija.
Image
சிரிப்புத் தான் வந்ததடி... தோழி சிரிப்புத் தான் வந்ததடி. 😜😜😜😜😜😜😜😜😜😜 கல்யாண வயது வந்ததென சொல்லி மாப்பிள்ளை பார்த்தாரடி தோழி மாப்பிள்ளை பார்த்தாரடி. நாட்டு மாப்பிள்ளை நல்லதில்லை என வெளிநாடு அனுப்பினால் வீடும் விளங்குமென தீர்மானங் கொண்டாரடி. ஓடித்திரிந்ததில் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை ஆப்பிட்டுக் கொண்டானடி. தரகரிடம் அந்த மாப்பிள்ளை வைத்த வேண்டுதல்கள் இவைதானடி... நீண்ட முடியுடைய பெண் வேணும். மெல்லிய பெண்ணாக இருக்கோணும். சின்னப் பெண்ணாக இருக்கோணும். நான் அத்தனை அம்சமும் பொருந்தி இருந்ததால் பெருமை அடைந்தேனடி தோழி பெருமை அடைந்தேனடி.... சம்மந்தம் பேசிய தரகன் தந்த புகைப்படம் எனக்கும் பிடித்ததடி..... கமல் போல் அழகிய விழியுடன்... ஓர் அழகுத் திருமுகம் .... வகிர்ந்தெடுத்த தலைமுடி.... பார்க்கப் பார்க்கத் தேனூறும் பார்வையடி.... ஆவல் தான் மனமெங்கிலும்... நான் தேடித் திரவியம் தேடினும் இவன் போல் ஒரு மாப்பிள்ளை அமையாதடி.....என் கற்பனைச் சிறகுகள் காற்றில் பறந்திட கை கோர்த்து அவன் என் கையைப் பிடித்திட வெட்கமும் நாணமும் கொல்லவும் அள்ளவும் கனாக் கண்டேனடி ஆண்டாள் போல்
Image
கழுகுக்கும் பருந்துக்கும் படையலிடுங்கள். 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 ஊமைக்கீதமாய் உறங்கிப் போன துயர் ஏழு மாதம் கடந்த பின்தான் பெற்ற தாய்க்கும் புலப்பட்டதோ? பாதுகாப்புக்கு காவல் பேய்களா? பார்த்திருந்து காவல் காத்தது இளையவள் உடலை ருசித்திடவோ? ஊமையின் வேண்டுதலை இறைவனும் உணரக் காலம் கடந்ததும் ஏன்? கடவுளும் செவிப்புலன் இழந்தவனா? கல்லில் செதுக்கிய கண் கொண்ட கடவுளுக்கு கண்ணில் உயிர் தேடல் அறியாமையே... கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரியாய் நீதி தேவதை. துச்சாதனனைப் பெற்றவளுக்கு துகிலுரிப்பு பிழையாகுமா? குறிவிறைப்புக் குதறலில் கிழடும் அடக்கமடா.... பெற்ற தாயோடும் மகளோடும் சகோதரியோடும் இந்த எருமைகள்  எப்படி மரியாதை காட்டினவோ? நாய்ப் பிறப்புக்களுக்கு மகளென்ன தாயென்ன ? இழி பிறவிகளைப் பெற்ற தாய்மாரே! சகோதரிகளே! மனைவியரே! மகள்மாரே! நீங்கள் உத்தமப் பிறவிகள் என நிறூபிக்க ஒரு வழியுண்டு அவர் குறிகளை அறுத்து கழுகுக்கும் பருந்துக்கும் படையலிடுங்கள். மீதிக் காலம் சாகும் வரை ஆடையில்லாமல் அலையவிடுங்கள். காண்போருக்கு காறித் துப்பவும் கனதியான பாடமாகவும் அமையுமது. வன்னிமகள் எஸ்.கே.

இன்னொருத்தியின் கணவன்....

Image
அந்நியனைப்   போல கணவனை சந்திக்கும் கொடுமை எந்த மனைவிக்கும் வரக்கூடாது. எங்கேயோ பார்த்த முகமாக தொலைந்திருந்தது -அந்த வாழ்வு தந்த(ளி)ழித்த முகம். அவனின் கண்களில் ஒளியில்லை. வாழ்வின் எல்லைகளைப் புரிந்திட்ட பக்குவத்தில் அமைதி போர்த்திருந்தான். புன்னகைகள்  புதைத்திருந்தன. காதலித்த அதே கண்கள் தான் இன்றும் அவனைப்பார்க்கிறது. பார்வையில் வித்தியாசங்கள் மிகுதியாய்.......இடைவெளியாய்.... அமைதிசூடிய குரல் அவனோடு உரையாடியது. "நல்ல கணவனாய் வாழத்தெரியலை நல்ல அப்பாவாக வாழ்ந்து விடுங்கள்." பேசவோ திட்டவோ அவள் உரிமை எடுக்கவில்லை. அந்த உரிமையை எடுக்கவும் அவள் தயாரில்லை. குழந்தைப் பருவத்தில் அவளும் தாய் தந்தையை இழந்தவள் தான். இல்லாத தந்தை தாய் ஏக்கத்தின் வலிகளை சுமந்தவள் தான். அப்பாவோடு தோளாடும் குழந்தைகளை ஏக்கத்தோடு பார்த்த விழி அவளது. "இங்கு அப்பா இருந்தும் இல்லாத நிலை. இந்தப் பருவம் இந்தக் காலம் இனி வரப் போவதில்லை. "நல்ல அப்பாவாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்" அவளின் வேண்டுதல்கள் கேட்கப்பட்டது. அவளின் நியாயங்கள் அவன் இருதயத்தை நனைத்தன. ம

செவ்வரத்தம் பூ...

Image
எல்லோரும் விரும்பும் வள்ளல். விஞ்ஞானத்தின் விந்தை. ஆணும் பெண்ணுமினைந்த அர்த்தநாரி. வரட்சியிலும் தளரா வலிமை கொண்ட ஐந்திதலால் வருடும் "சீனத்து ரோஜா" எண்ணத்தில் வேறுபட்ட மனிதர் போல வண்ணத்தில் வேறுபட்ட நிறமுடையாய். கூந்தலின் இயற்கைச் "சம்போ"வும் நீ குழந்தைகளின் மருந்தும் நீ. நீ இருந்தாலே கோவில்  பூசைக்கும் சிறப்பு. இனத்தை ஒட்டி உறவாடுவதில் நவீனமே விஞ்சும் விந்தை நீ. ஒரு தேடலின் தெவிட்டாத இன்பம் நீ. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija #குறிப்பு:    இக்கவிதை செவ்வரத்தம் பூ பற்றி கவிதை எழுதுங்கள் என கேட்ட  Rubiny Nagaratnam (point Pedro) அவர்களிற்கு சமர்ப்பணம்

பைத்தியத்தின் பிறப்பால் பாழானது கோட்டை.

Image
அழகாக கட்டிய இரத்தக் கோட்டைக்குள் தப்பிப் பிறந்ததொரு பைத்தியம். பைத்தியத்தின்  புத்திக் குறைவால் பத்தி எரிந்தது  கோட்டை. அத்திவாரமாய் நம்பி குத்தி உலையிலிட்ட அவியல்கள் நாசமாய்.... இறைப்புக்கள் நாசமாய்.... பைத்தியத்தின் ஆட்டத்தால்.... கற்கள் சிதைந்து உருண்டன. உயிர்ப்பலிகள் கோரமாய்... கோட்டை தரைதட்டி உருவற்று சிதிலமாய் முகவரி தேடலில்... பைத்தியத்தின் பிறப்பால் நல்ல கோட்டை வெறிச்சோடி பயனற்ற பாலைவனமானது. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

தவம்

Image
ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... கடும் வரட்சி....... நாவின் உலர்ச்சி........ கருத்து வெம்மைகள்..... கௌரவ ஊடல்களோடு ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... இயற்கை எமது கைகோர்க்கையில் இதயங்களின் ஈரத்தை வாரி இழுத்து மழையாய் நனைத்து சிலிர்க்கும். கோபத்திலும் கண்டிப்பிலும் உன் பாசத்தை மட்டுமே அன்னமாய் பகுத்துண்கிறது மனம். நீ..... கண்டம் விட்டு கண்டம் ஓடி கண்ணில் படாமல் மறைந்து எங்கு தான் சென்றாலும் ஒரு நாள் வருவாய் காத்திருப்புக்கள் வீணாவதில்லை. வந்து என் வீட்டின் முகட்டை உற்றுப் பார் உனக்காக வாங்கிய தண்ணீர்ப் போத்தல் துடிதுடித்து இறக்காமல் தூக்கில் தொங்கும் வலி சுமந்து தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த........ வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மகிமையில் மகிழ்

Image
தெவிட்டாத முத்தத்தை தெருவுக்குத் தெரு பரிமாறும் வெள்ளைத் தோல் தேசத்தில் அடைக்கலம் புகுந்த அன்னை தேசத்துப் பறவை முத்தம் புனிதமென்றது...... வளர்ப்பும் வழிகாட்டலும் வளமாய் நிறைந்திருந்தால் தேகங்கள் மூடிக்கொள்ளாது தேவையற்ற பண்பாடுகளை..... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

வன்னிமகளின்...ஹைகூ... சில...

Image
#கவலை வெற்றுத்தாளில் விழுந்த மைத் துளி. #மகிழ்ச்சி உலகின்  அழகிய இயற்கைச் சித்திரம். #வாழ்க்கை தன்னை நேசிப்போருக்காய் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம். #நம்பிக்கை சொல்லாமலே செயலாற்றும் சுவாசம். #நினைவு நேரத்தைக் கடந்தோடும் சுழிப்பு சூறாவளி. #ஆசை ஆடை களைந்து வெட்கத்தைத் தேடும் நிர்வாணி. #காதல் மனதின் கனவுப் பறப்பு. #முத்தம் உயிர்த்தலை உறுதிப்படுத்தும் பசளை நீர். #மழை இயற்கையின் இராக ஆலாபனை. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

முழுநிலவு ரகசியங்கள்...

Image
முழு நிலா இரவில் மனமோ முந்தி முந்தி சிறகடிக்குது..... கூட்டாயிருந்து குழைத்தொரு உருண்டைச் சோற்றை உண்ட சுகம் அடிநாவில் அமிர்தமாய்...... ஆட்டமும் பாட்டுமாய் முழுநிலவு தழுவ கடற்கரை நண்டு பிடித்திட ஓடிய மணல்வெளி விழிகளிலே..... ஒய்யாரமாய் காட்டுக் கட்டிலில் காற்று வாங்கி முழுநிலவை கண்ணுக்குள் பதித்த இரவுகள் அற்புதம்...... பாட்டிலே தமை மறந்து முழுநிலா முறுவலாய் ஆடிய தங்கையரின் நாட்டியங்கள் சிரிப்புக்கள் கலைந்து போன கனவுகளாய்.... முழுநிலவில் முகிழ்ந்த காதல் கனவுகள் பசுமையாய்.... முழுநிலவுக்கு முத்தமிட்டு இரவுத் தாயை அணைக்கின்றேன். விடியலுடன் சந்திப்போம்.... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

அறியாமை

Image
பூமியின் பச்சைத் தங்கம். புல் வகையில் பெரிய புல். மூங்கில் என்பது அதன் பெயர். ஓங்கி நீண்டு வளரும். காற்றுக்கும் புயலுக்கும் வளைந்து தற்காக்கும். இருந்தும் வண்டுகளின் பற்களுக்குப் பதமாகும். தங்கள் கோரப்பற்களால் துளையிட்டுத் துளையிட்டு மகிழும் வண்டுகள் அறிவதில்லை மூங்கில் ஒரு நாள் புதிய கீதத்தைப் பூமிக்குத் தருமென்பதை. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija