செவ்வரத்தம் பூ...


எல்லோரும் விரும்பும் வள்ளல்.
விஞ்ஞானத்தின் விந்தை.
ஆணும் பெண்ணுமினைந்த அர்த்தநாரி.
வரட்சியிலும் தளரா வலிமை கொண்ட
ஐந்திதலால் வருடும் "சீனத்து ரோஜா"

எண்ணத்தில் வேறுபட்ட மனிதர் போல
வண்ணத்தில் வேறுபட்ட நிறமுடையாய்.
கூந்தலின் இயற்கைச் "சம்போ"வும் நீ
குழந்தைகளின் மருந்தும் நீ.

நீ இருந்தாலே கோவில்  பூசைக்கும் சிறப்பு.
இனத்தை ஒட்டி உறவாடுவதில்
நவீனமே விஞ்சும் விந்தை நீ.
ஒரு தேடலின் தெவிட்டாத இன்பம் நீ.

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija
#குறிப்பு:
   இக்கவிதை செவ்வரத்தம் பூ பற்றி கவிதை எழுதுங்கள் என கேட்ட  Rubiny Nagaratnam (point Pedro)
அவர்களிற்கு சமர்ப்பணம்

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹