குற்றச்சாட்டு 🌷🌷🌷



இந்த தண்ணீருக்குத் தான்
தாமரை மீது இத்தனை காதல்....
தாமரைக்குப் பாரமாகாது 
கீழிருந்து தாமரையை
தன்மடிமீது   ஏந்தி...
தாமரை அழகிலும்....
தாமரை மகிழ்விலும்....
மறைந்து கரைகிறதே....
இந்தப் பார்வையாளர்களோ
புனித அன்பைப் புரியாமல்
ஒட்டிக் கொள்ளாத உறவென
குற்றம் சாட்டுகிறார்.
விம்பங்களில் இன்பம் காண்பதும்
அழகு தானே..
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija.

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹