கண்கள் என்ற சுனைநதியில் காதல் என்ற அமுதசுரபி ஊற்றெடுக்கும். பறவைகளின் மகிழ்ச்சிச்சிறகைப்பாய் இதயத்தில் பரபரப்பு மேவும். ஜிவ்வெனப் பரவும் ஒருவித மெல்லின மின்சார தொடரலை அதிர்வு தாலாட்டு மந்திரப்பாடல் பாடும். ஒளிநிறைந்த கண்கள் மனதைத்திருடித் திருடி இருளைப்போர்த்துக் கொள்ளவே அவஸ்தைப்படும். பூக்களும் பாக்களும் தெய்வ தரிசனமும் சாட்டுப்போக்குக்கு துணை நிற்கும். நட்புக்களை விட்டு விலத்திய மௌன குறுகுறுப்பு குற்றால அருவியாய் குதித்தாடும். ஏதோ ஒரு பரமரகசியத்தைத் தேடும் மகரிஷிகளின் தவத்தில், நெட்டுருகிப் பாடும் சுலோகமந்திரமாகும் அந்தக் காதல்நாமம். தேடல் தேகத்தையே குறிபார்க்கிறதென கைவிரல்களின் மெல்லிய உரல்சல் உறுதிப்படுத்தும். அதையே இன்ப சுவர்க்கமென ஒரு அசரீரி உறுதிப்படுத்தி மாய வலை விரிக்கும். மூடாத விழிகள் இரவுகளை ரட்சகனாக்கி, இதயச்சோலையில் கதகளிநடனத்தை விதவிதமாய் அரங்கேற்றும். இரவுகள் இன்பத்தின் போதையென விழிமூடாத இரவுள் ரகசியமாய் ஏதேதோ கதைபேசி கிணுகிணுக்கும். விரல்கள் வரையாத வண்ணக் கடிதங்களை வரைந்து தீர்க்க மனத்தூரிகை ...
Comments
Post a Comment