எஞ்சிய காலம்..... 💓💓💓💓💓💓💓

சிறகு விரித்து அருவி குளித்து
உயரப் பறந்திட வா.! - இந்த
வான வெளியை பறந்து அளந்து
பலதும் அறிந்திட வா.! -வண்ண
கலவை குளித்த நிலவில் ஒருநாள்
கதைகள் பேசிட வா.!- மனம்
மயங்கிமயங்கி நிலவில் உறங்கும்
வரங்கள் பெற்றிட வா.!
வாழ்வின் எஞ்சிய காலம்
வாரிக் கொடுப்பதில் கைகள் சிவந்திட வா.! -அந்த
சிவந்த கரத்தின் திடலில் மலரும்
மலர்கள் இரசித்திட வா.!

செக்கச் சிவந்த கதிரவன் ஒளியை
கண்ணில் ஏந்திட வா.! இந்த
உலகில் தீய ச(ங்)கதி அழிக்கும்
விழிகள் சுமந்திட வா.! - நல்ல
தாயின் கருவில் மலர்ந்த திருவென
மனங்கள் போற்றிட வா.! -இதய
சிலிர்ப்பில் சிலிர்த்து உயிர்ப்பில் நனையும்
அன்பில் குளித்திட வா.!
வாழ்வின் எஞ்சிய காலம்
நெருடும் அலைகளை
நெம்பித் தள்ளிட வா.! -நல்ல
கனவு பலிக்கும் காலம் சிறக்கும்
கரங்கள் கோர்த்திட வா.!

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹