Posts

Showing posts from March, 2020

காலம் கரைக்கும்.

Image
தகித்துக்கொண்டிருந்த ஆத்மா தான் எடுத்த உருவை  அழித்து, தன்னுருக்கண்டு மயங்கியோரைத் தண்டித்த வெறித்தனத்தில் மீளாத்துயிலை சடலத்திற்கு வழங்கியது. வலியோடிய நரம்புகள் ஓய்வுற்றன. வதை சுமந்த குருதி உறைந்து போனது. குற்றப்போர்வை போர்த்திய மௌனிகள் வாய்மூடி கரையுண்டு போகும் தேகத்தைச் சுமந்து நடமாடும் ஆத்மாவை அணைத்தழுதார். ஆத்மா விட்டேகிய பிண உடல் தாள தப்பட்டை சங்கோசையோடு இறுதி புகுந்த இடம் விட்டு நகர்ந்தது. பிண உடலை எரிகொள்ளி மேவியது . எரியுண்ட தேகச்சாம்பல் கரையுண்டு போனது கடலில். காரணமின்றி எதுவுமில்லை. காரியர்கள் இனி நினைவைக் கரைப்பார். கரையும் வரை நினைவுகளில் கரைவார். காலம் கரைக்கும். எல்லாமே கரைந்து போகும். Latha kanthaiya (வன்னிமகள் எஸ்.சஞ்சிகா) .

இறந்த நியாயங்கள் எங்கும் பிறப்பதில்லை.

Image
அழுது மயங்கி, களைத்து உறங்கி , மீண்டும் குற்றுயிரும் குலையுயிருமாய் விழிகள் திறந்த போதெல்லாம் நானிருக்கிறேன் எனச் சொல்லி ஆறுதல்படுத்த எப்போதும் என் அருகில் யாரும் இருந்ததில்லை. எப்போதும் இருப்பதைப் பறிக்க நினைத்தோரின் வரிசை மட்டும் நீண்டிருந்தது. வலி தெரியாத ஒருவகை மாத்திரை போட்டு நிரந்தரமாக உறங்க வேண்டும் என ஒரு பிரமை பூத்த போதை நெஞ்சோடு போராடிக் களைத்து துவண்ட போதெல்லாம்                "எங்களை என்ன செய்வதாக                 உத்தேசம்? " என நான்கு சின்ன விழிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன. நான்கு சிறிய கரங்கள் மார்போடு இறுக்கியிருந்தன. அந்த சின்னத் தசைக்கூட்டுக்குள் இறுகிப்பிணைந்த இதயக்கடிகாரம்              "கைவிட்டு விடாதே                தெருவிட்டு விடாதே" என கதறிக்கெஞ்சிக்கொண்டிருந்தன. நசுங்குண்ட வாழ்வு . நாதியற்ற வாழ்வு. வலி தெரியாத உலகம் தேவை என்று தான் அடிக்கடி ஒப்பாரி பாடியது உள்ளம்.           "நம்பித்தானே வந்தேன்" என அலறிக்கொண்டது ஆத்மா. அதே அலறல் சத்தத்தையே சின்னஞ்சிறிய அக்கினிபூத்த இதயங்களும் பதை பதைத்து நீதி