ஒரு தண்ணீர்ப் போத்தல்
தவமாய் தவமிருக்கிறது
உன் இதழ்களை ஈரப்படுத்த.....
கடும் வரட்சி.......
நாவின் உலர்ச்சி........
கருத்து வெம்மைகள்.....
கௌரவ ஊடல்களோடு
ஒரு தண்ணீர்ப் போத்தல்
தவமாய் தவமிருக்கிறது
உன் இதழ்களை ஈரப்படுத்த.....
இயற்கை எமது கைகோர்க்கையில்
இதயங்களின் ஈரத்தை
வாரி இழுத்து மழையாய்
நனைத்து சிலிர்க்கும்.
கோபத்திலும் கண்டிப்பிலும்
உன் பாசத்தை மட்டுமே
அன்னமாய் பகுத்துண்கிறது மனம்.
நீ.....
கண்டம் விட்டு கண்டம் ஓடி
கண்ணில் படாமல் மறைந்து
எங்கு தான் சென்றாலும்
ஒரு நாள் வருவாய்
காத்திருப்புக்கள் வீணாவதில்லை.
வந்து என் வீட்டின் முகட்டை
உற்றுப் பார்
உனக்காக வாங்கிய
தண்ணீர்ப் போத்தல்
துடிதுடித்து இறக்காமல்
தூக்கில் தொங்கும் வலி சுமந்து
தவமாய் தவமிருக்கிறது
உன் இதழ்களை ஈரப்படுத்த........
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
தவமாய் தவமிருக்கிறது
உன் இதழ்களை ஈரப்படுத்த.....
கடும் வரட்சி.......
நாவின் உலர்ச்சி........
கருத்து வெம்மைகள்.....
கௌரவ ஊடல்களோடு
ஒரு தண்ணீர்ப் போத்தல்
தவமாய் தவமிருக்கிறது
உன் இதழ்களை ஈரப்படுத்த.....
இயற்கை எமது கைகோர்க்கையில்
இதயங்களின் ஈரத்தை
வாரி இழுத்து மழையாய்
நனைத்து சிலிர்க்கும்.
கோபத்திலும் கண்டிப்பிலும்
உன் பாசத்தை மட்டுமே
அன்னமாய் பகுத்துண்கிறது மனம்.
நீ.....
கண்டம் விட்டு கண்டம் ஓடி
கண்ணில் படாமல் மறைந்து
எங்கு தான் சென்றாலும்
ஒரு நாள் வருவாய்
காத்திருப்புக்கள் வீணாவதில்லை.
வந்து என் வீட்டின் முகட்டை
உற்றுப் பார்
உனக்காக வாங்கிய
தண்ணீர்ப் போத்தல்
துடிதுடித்து இறக்காமல்
தூக்கில் தொங்கும் வலி சுமந்து
தவமாய் தவமிருக்கிறது
உன் இதழ்களை ஈரப்படுத்த........
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Comments
Post a Comment