அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை


அரசியல் சூதாட்ட
அகங்களின் கபடத்தில்
அகப்பட்டுச் சிதறியது
அடைகாத்த இலட்சியம்.

சுய நலப் பிரிவுகளால்
சொந்தங்கள் நடுத்தெருவில்.
உயிர்களின் இழப்புடன்
தேசத்தின் துகில் உரிப்பு.....

இரகசிய அமைதியில்
தலைவனைத் தேடி
காலக் காத்திருப்பு நீட்சியாய்....

வரமாட்டான் இனித் தலைவன் என்று
இறப்பு சான்றிதழ் இல்லாமலே
தலைவனுக்குப் போட்டியிட்டன
பன்றிக் கூட்டங்கள்.

பஞ்சமா பாதகங்கள்
பரந்தன தேசத்தில்...
தலைவிரி கோலத்துடன்
தரங்கெட்ட அரசியல்...
ஆசன ஆர்வலரின்
ஆசனங்களுக்கு  தீ மூட்ட
அனுமானின் வால் நீள்கிறது ....

பஞ்ச பாண்டவர்கள்
தோன்றித் தொடுத்த போரில்
மீண்டு கொண்டனர் தேசத்தை மீண்டும்.
அஞ்ஞாதவாசம் பன்னிரண்டு
ஆண்டுகளை புதைத்துக் கிளர்வது.
புரியாதவர்க்கு இது புதிர்க்கதை தான்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹