வன்னிமகளின்...ஹைகூ... சில...

#கவலை
வெற்றுத்தாளில் விழுந்த
மைத் துளி.

#மகிழ்ச்சி
உலகின்  அழகிய இயற்கைச் சித்திரம்.

#வாழ்க்கை
தன்னை நேசிப்போருக்காய்
பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம்.

#நம்பிக்கை
சொல்லாமலே செயலாற்றும்
சுவாசம்.

#நினைவு
நேரத்தைக் கடந்தோடும்
சுழிப்பு சூறாவளி.

#ஆசை
ஆடை களைந்து வெட்கத்தைத் தேடும்
நிர்வாணி.

#காதல்
மனதின் கனவுப் பறப்பு.

#முத்தம்
உயிர்த்தலை உறுதிப்படுத்தும் பசளை நீர்.

#மழை
இயற்கையின் இராக ஆலாபனை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹