கடிதம்
-------------
எழுதுகோலுக்கும் கடதாசிக்கும்
அழகூட்டிய முத்தம்
கடிதம்.
பத்திரமாய் இதயத்தோடு
அடிக்கடி மெய்யுருகி
அணைத்த பொக்கிஷம்
கடிதம்.
இதயங்களின் இனிய எண்ணத்தைச் சுமந்த
காலைநேர பூபாள ராகம்
திருமுகம்( கடிதம்)
அன்பின் திருமுக தரிசனத்தை
படியெடுத்தனுப்பிய
தூதறிக்கை கடிதம்.
காகிதமும் அன்புடையார் கன்னங்களாகி கலந்துருகிய
கழிமுகத்திடல் கடிதம்.
கிறுக்கல்கள் எல்லாம்
சொல்லோவியமாய்
தரிசனம் தந்த அழகிய
அழைப்புமணி கடிதம்.
இன்றும் காகிதமுண்டு
எழுது கோல்களுமுண்டு
காலப்பெருவெளி அரித்த
கண்காட்சிப் படிமமாய் கடிதம்.
உணர்வுகளைச் சேகரித்த
ஊற்றறிக்கை தூர்ந்ததுவோ ?
தொலைந்த மனிதத்தை
மலர மலர்வாய் திருமுகமே..!
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija
-------------
எழுதுகோலுக்கும் கடதாசிக்கும்
அழகூட்டிய முத்தம்
கடிதம்.
பத்திரமாய் இதயத்தோடு
அடிக்கடி மெய்யுருகி
அணைத்த பொக்கிஷம்
கடிதம்.
இதயங்களின் இனிய எண்ணத்தைச் சுமந்த
காலைநேர பூபாள ராகம்
திருமுகம்( கடிதம்)
அன்பின் திருமுக தரிசனத்தை
படியெடுத்தனுப்பிய
தூதறிக்கை கடிதம்.
காகிதமும் அன்புடையார் கன்னங்களாகி கலந்துருகிய
கழிமுகத்திடல் கடிதம்.
கிறுக்கல்கள் எல்லாம்
சொல்லோவியமாய்
தரிசனம் தந்த அழகிய
அழைப்புமணி கடிதம்.
இன்றும் காகிதமுண்டு
எழுது கோல்களுமுண்டு
காலப்பெருவெளி அரித்த
கண்காட்சிப் படிமமாய் கடிதம்.
உணர்வுகளைச் சேகரித்த
ஊற்றறிக்கை தூர்ந்ததுவோ ?
தொலைந்த மனிதத்தை
மலர மலர்வாய் திருமுகமே..!
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija
Comments
Post a Comment