புதுப்பிப்போம். 🌟🌟🌟🌟
உள்ளக் காதலோடு உள்ளத்தால்
உன் தோளில் சாய்கிறேன்.
சிலிர்க்கும் சிறகுகளை தளர்த்தி
வாரிக் கொள்கிறாய்.
உலகத்துப் பூக்களெல்லாம் திரண்டு
உச்சிவழியேகி இதமூட்டும்
இன்பக்கிளர்ச்சியாய் தேகம்.
உன்
விழிப்பார்வைக்குள் என்னை
விழுங்கிக் கொள்கிறாய்.
கண்களும் காந்தமாகப் பற்றும்
காந்தக்கலை தான் காதலா?
தேகத்தையும் தேனாக
மெழுகாக கரைந்துருக்கும்
உணர்வு தான் காதலா?
குரலிலே குதூகலத்தையும்
மௌனத்திலே தவிப்பையும்
நெஞ்சுக்கூட்டுப் பறவை
அனுபவிக்கும் இருநிலையா காதல் ?
காதல் எந்த வகையாய் இருந்தாலென்ன?
நீ மட்டும் என்னிரு விழிகளால்
என்னை விழுங்கிக் கொள்ளும்
அந்த அடர்த்தி குறைந்த உள்ளத்தால்
இன்பக் காற்றில் இணைந்து பறப்போம்.
வா... என் காதலின் பேரின்பமே....
உலகையும் அண்டசராசரத்தையும்
நொடிக்கு நொடி காதலால் புதுப்பிப்போம்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Comments
Post a Comment