செத்தபின் விழித்துக் கொண்டவன். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥



கண்ட இடமெல்லாம்
கறையான் புற்றாக
காவியுடைக் காதலாய்
முற்றும் துறந்தவனின் எழுகை.

துட்டுப் பெற்ற எட்டப்பர் நாவுகள்
கொட்டும் பொய்யுரை
கறைபடிந்த வடுவாய்.
காலத்தில் பதிவாய்.

கட்டிய மனைவியை
பெற்றிட்ட பிள்ளையை
சற்றும் நினையாது ஓடிய
அரச சம்சாரி
முற்றும் துறந்த முனிவனாகினான்.
காலம் அவனைக் கடவுளாக்கியது. அவன்
போதனைகள் பெருமை பூத்தன.

இரத்தமும் கண்ணீரும் மனிதர்க்கு
ஒத்த நிறமென்று ஓதியவன்
சித்தங் கலங்கி
உலக சுகம் வெறுத்தவன்
செத்த பின் விழித்துக் கொண்டானோ
செய்தது பிழை என்று ஆ ?😄😃

அதனால் தான் கண்ட இடமெங்கும்
கறையான் புற்றாக
கொண்டெழத் துடிக்கிறானோ
யசோதையின் கணவன் ?

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹