அதிசயமே அதிசயிக்கும் ஆற்றல் அரசியம்மா
அம்மா! உன் வயிற்று
உதிரப் பன்னீர் கலந்த
உத்தமப் பொய்கையில் மிதக்க
என்ன தவம் செய்தேனோ?❤
தொப்பிள் கொடிவழி பசியாறி
நீந்திச் சுழித்து நீச்சலடிக்கையில்
வயிற்றுச் சுவற்றில் வலுவாய் இடிக்கின்றேன்.
இடித்த போதெல்லாம்
இதமாய் தடவி
இன்புற்றுவது ஏனம்மா.?
ஆசைக் கதைகளும்
ஆற்றல் மிகு உணவுமிட்டு
முகம் தெரியா உறவு என்னை
முழுவதுமாய் ரசிக்கிறாய் நீ.
இதோ !
எட்டி எட்டி உதைக்கின்றேன்
கட்டிக் கட்டிப் பிடித்துந்தன்
கரங்கள் மகிழ்கிறதே.- நீ
அதிசயமே அதிசயிக்கும்
ஆற்றல் அரசியம்மா.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
ஓவியத்தின் உரிமையாளர்
மகிழினி காந்தன்
Comments
Post a Comment