தெளிவு
"உயிர்களிடத்தில் அன்பாயிரு".
கருக் கொண்ட கருத்தைப்
பரிசோதித்தேன்.
கருச்சிதைவாய் போனது.
தாய்க் கடவுளர்
விடையிலே ஊர்கோலம்.
தனையனோ மயிலேறி.
சிறு பிராணி எலியோ
பருமனில் நசியுது.
ஊர்ந்தோடும் பாம்பு
காட்சிப் பொருளாய் கழுத்தில்.
பாம்பை படுக்கையாக்கி
தம்பதிகளின் கொண்டாட்டம்.
பூக்களின் படைப்பு
பெண்கள் அரியாசனம்.
ஆணுக்குப் பிறந்த பிள்ளை
புலியேறி சவாரி.
அடுக்கி அடுக்கி பார்க்க
மலராத போதனைகளோ என
நொந்து தான் போனேன்.
உதித்தது ஒரு தெளிவு.
இந்தக் கெடுதிகளை
செய்யலாகாதென.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Comments
Post a Comment