வலிதான சிறகுகள் வேண்டும்.


விண்ணைத் தொடக் கனவு சுமந்த
எண்ணிலா மழலை உலகம்
விற்பனைச் சந்தையிலே
விலையாக விலையாகி....

துட்டர்களின் துருப்பிடித்த கரங்களிலே
சிட்டுக்களின் சிறகுதிர்வு  வதையாக....
வயிறு காய்ந்து வற்றித் தவிக்குது
உலகை ஆளும் இளைய சந்ததி.

பாலகக் கடவுளரை அரக்கருலகம்
பட்டாசுத் தொழிலாளராய் சிறைப்பிடிப்பு.
சிந்தை சுருங்கும் மந்த நோய்களால்
நொந்து நலிகிறது பிஞ்சுப் பசுமை.

போதையுலகம் புகுந்து நல்ல
பாதையைப் பிளந்துதிர்க்க வஞ்சக
வாதை செய்வோரும் இப்போ
வாழ்கிறார் ஒரே வீட்டினிலே...

பூக்களை இரசிப்பதற்கு செடிக்கு
காப்பிடல் அவசியமே...சிறுவர்
உலகினைக் காப்பதற்கும்
சிறகுகள் வலிதுடன் வேண்டுமிங்கு.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹