மாய்மாலம் காட்டும் கள்ள நெஞ்சர்கள்.
செத்துத் தொலையட்டும்.
🌷🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀

மீண்டும் போர் வேண்டாம்.
காணாமல் போனோர் வேண்டாம்.
கல்லறைகள் வேண்டாம்.
தாயிழந்த பிள்ளைகளின் தவிப்பு வேண்டாம்.
நிந்தம் நித்தம் அழும் துயரம் வேண்டாம்.
அங்கமிழந்த அவலநிலை வேண்டாம்.
நட்பை இழந்த சோகம் வேண்டாம்.
குருதி பாயும் தேசம் வேண்டாம்.

அவலம் சுமந்த காலத்தில்
விடுப்புப் பார்த்த வீணர் வேண்டாம்.
சொகுசாய் இருந்த அயோக்கியர்கள்
துன்புற்றோரை செம்மறியாய்
மேய்க்க வரும் இழிநிலை வேண்டாம்.
துன்புற்றோர் கண்ணீரைக்
காட்சிப் பொருளாக்கும்
அரசியல் கயவர்கள் வேண்டாம்.
தூண்டி விட்டுக் குளிர்காயும்
துட்டர்களும் வேண்டாம்.
ஓடி ஒழிந்து வீரம் பேசும்
ஓநாய்களும் வேண்டாம்.

தமிழ் இனத்துக்குள்ளேயே
பல உயர்வு தாழ்வுப்  பேதமைகள்
ஒரு கொள்கையில்லாத
பல ரட்சகர்கள் ராட்சதராய்.....
ஒரு கதிரை ஏற பலரை வசைபாடும்
தமிழ்த் தலைமை தீ வாய்கள்.
ஒற்றுமை ஒற்றுமை என ஓதுவாரிடையே
ஒற்றுமையில்லையே அவரேன் நமக்கு?

கும்பி(வயிறு) கொதிக்க
குண்டுகள் உயிர் குடிக்க
உயிர்களை இழந்து
உறவிடம் தொலைத்து
நொந்து நொந்து நடந்த வரலாற்றை
வந்துதித்த சந்ததிக்கு
வரிந்து கட்டிக் கொடுக்கின்ற
கள்ள நம்பூதிரிகளை
செருப்பால் அடித்திடுவீர்.👣
செத்துத் தொலையட்டும்
இனியும் மக்களைப் பகடையாக்கி
மாய்மாலம் காட்டும் கள்ள நெஞ்சர்கள்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹