குறித்துக்கொள். மறவாதே....❤
இதயத்தில் குடியிருக்க வந்துவிட்டு
இடம் மாறத் துடிக்கிறாய். நான்
வெளியேறி விட்டதாய்
நீயாக கற்பனை செய்கிறாய்.
உனக்குத் தெரியாதா
ஒரு தடவை இதயத்தில்
குடி புகுந்தால்
இரத்தச் சுற்றோட்டம் போல
வெளியேற முடியாதென.
இந்த மூச்சு உடலை விட்டு நிரந்தரமாய் பிரிகையில் தான்
உனக்கும் எனக்குமான
உலகப்பிரிவு.
குறித்துக் கொள்.
அது வரை உன்னை
இதயம் பாடலோடு தாலாட்டும்.
அடிக்கடி முத்தத்தால் குளிப்பாட்டும்.
நினைவுகளில் பசுமையாய்......
பூத்திருப்பாய். மறவாதே.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment