மீண்டும் சுட்டி விளக்கில்.... ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய்?
உன் திடீர் வருகையால்
குதுகலித்து படபடக்குது காற்று....
சட்டெனக் கொட்டிய
நீர்க்கோர்வைக்குள் புகுந்து
ஆடைகளைச் சேகரிப்போர்
அவலத்தை ரசிக்கிறாய்....
சட்டப்படி வா என்றுனக்கு
கட்டளையிட நாம் யார்?
தொட்டுத் தொட்டுத் தாலாட்டும்
உன் இயல்பில் ஏனிந்த மாற்றம்?
தேக்கி வைத்த அன்பை எல்லாம்
கொட்டிப் பொழிந்து தீர்க்கிறாய்.
இதமாக ஒரு காற்றை
தேகத்திலே பூசுறாய்....
மகிழும் ஒரு புன்னகையை
மின்னலென தீட்டுறாய்...
மனதில் உள்ள காதலை நீ
முழங்கி முழங்கிப் பாடுறாய்...
இரவை அணைக்க ஒளிகளை நீ
தடைகள் செய்து பூட்டுறாய்...
மீண்டும் அந்த சுட்டி விளக்கை
ஏற்ற வைத்தே சிலிர்க்கிறாய்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Comments
Post a Comment