மூகமூடி சிரிக்குது......... மனம் மூடி அழுகுது.


தொலை தூரமிருந்தாலும்
தெவிட்டாத தேனமுத குரலாலே மகிழ்வு தந்தாய்...
நெருங்கி வந்த போதினிலே
நெருப்பாக சுட்டெரித்தாய்.

முகம் பார்க்க முடியாத
தொடுவானம் நீ ஆனாய்...
நேரில் காணாத போதிலும் -பாரில்
பெருபகை நானானேன்.

இன்னும் குறையாத காதலுடன்
முதன்முதல் முகமூடி நானணிந்தேன்.
குமுறிக் கொதிக்கும்
என் உள்ள எரிமலைக்குழம்பு
விழிச் சிகரத்தால் விடுவிடென
கன்னத்துப் பள்ளத்தாக்கால்
பாய்ந்து ஆவியாகும் கோலமதை
நீ காணக் கூடாதே....
முதன் முதலாய் நான்
முகமூடி அணிந்து கொண்டேன்.

என்னை கரைக்கும் உன்மீதான காதல்
உன்தன் வெறுப்பில் எரிந்தும் ஒளிர்கிறதே.
யாருக்கும் தெரியாது  மனதை
மறைக்க முகமூடி அணிந்தேன். -அந்த
மூகமூடி சிரிக்குது...உள்ளிருக்கும்
மனம் மூடி அழுகுது.

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹