காத்திருப்பில்....
காத்திருப்பு விநாடிகள்
பாறைப் பளுவாய் .....
மனம் தவநிலையில்
கொக்கைப்போல ....
சில விநாடிகள் விழிகளும்
மொழிகளும் மௌனித்து
ஊடலிடும் இன்பத்து தேடல்.
உடலின் சுரப்பிகள்
நிரப்பி நிற்கும்
இன்பச் சுவையில் நர்த்தனம்.
உன் வரவை உறுதிப்படுத்தும்
உதயக் கீற்றுக்காய் தனித்த தவம்.
படபடக்கும் இருதய தாளத்தில்
உனக்கான வரவேற்பு ஒத்திகை.
பட்சிகளின் பாடலில்
இதயத்தில் நீ ஆடும் கதகளி விருந்து.
உன்னுலகில் மலர்ந்தாடும் நிலையை
கேலி செய்யும் கடலலையின் கெக்கலிப்பு.
அடிக்கடி பூக்கும் உதட்டுப் பூக்களில்
ஒட்டு மொத்த உலகும் மயங்கிய மயக்கம்.
காத்திருப்பு சுகமான சுழற்சி.
காத்திருத்தல் சுகமானது.
மேனி தழுவாக் காதலிது.
மேகத் திரை விலக்கி
உன் முகம் பார்க்க
உனக்கான காத்திருப்பில்
இருதயப் பறவை
சிறைப்பட்ட பறவையாய்.
காத்திருப்பில் விழிகளோ
நீண்ட சீனச் சுவராய்....உன்
தரிசனத்தை பருகி ஆனந்திக்க
காத்திருக்கிறேன் முகங்காட்டு.
வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija
(ஒரு காலத்தின் பதிவு)
Comments
Post a Comment