வாசனைத் தடங்கள்....

நீண்ட காலத்தின் பின்
நீரணைத்த விழிகளுடன்.....
உடைந்த  கண்ணாடிக் கீறலாய்
உதிரத்தைச் சுவைத்த
வார்த்தை வீரியம்.....


முத்துக்கள் பதித்த நெஞ்சில்
முட்கள் கீறிய தடயங்கள் வலுவாக......
அலையடிப்பில் சிதறும் நீரில்
கரையுடைக்கும் வலிமைச்சொல்லலை....

கால நகர்வில் ஒரு பொழுதுன்னை
காண நேரின் உடைந்திடலாம் பொறுத்திடு...

கலகலத்த இரட்டைக்கிளவி போல்
மனதை சிலுசிலுக்க வைத்த
ஞாபகங்களைத் தேக்கி வைக்கிறேன்.
மணம் வீசட்டும் மல்லிகையாய்..

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹