இனித்தான் உனக்கு விடிவு காலம்.. சங்குகளே! மெல்லெழுந்து முழங்குங்கள்.


கூத்தாடும் நடிகரெல்லாம்
குவலையத்தை கெடுத்து நின்றார்.
புகைப் பிடித்தல் தடை என்பர் இவர்கள்
புகைவிடுவர் புதிது புதிதாய்....
அரை குறை ஆடை கட்டி
அங்கங்களை தெரிய விட்டு
கெட்டதெல்லாம் பரப்பி நின்றார்.
வெட்கங்களைப் பறக்க விட்டார்.

முத்தக்காட்சி முதலிரவு புனிதமிதை
எத்தனை வித அசிங்கத்தோடு
அரங்கேற்றி பேட்டியும் அலம்பல்களும்
சமூகச் சீர்கேட்டை விதைத்தவரை
களையாய் கொய்தெறிந்து விழித்திடுங்கள்.

இராமனால் சபிக்கப் பட்டதாம் ஈழம்
இமயமலை போகும் சுருட்டு வாத்தியின்
புதுக்கதை.... நரிக்கதை..நஞ்சுக்கதை.
தமிழக அரசியல் தலைவர்களுக்கு
சபிக்கப் பட்ட மண்ணில் பிறந்த எங்கள்
தலைவன் மட்டும் தேவையாம்
அரசியல் ஆடு களத்திற்கு..

கூத்தாடிப் பிழைத்தவனுக்கு
சிம்மாசன ஆசையா?
இமயமலைச் சாமிக்கு
உச்சந்தலையில் கோபமா?
சாமி தரிசனமும்
சாந்த சொரூபமும்
பொய்யாகிப் போனது
புரிந்திடு. -தமிழா !

வந்தோரை வாழ வைத்து
வாழ்வைத் தொலைத்து
வயிறு காயும் நிலை எய்தினாய்.
விழித்திடு கூத்தாடிகளுக்கு விடை கொடு
வியர்வை சிந்திய உனது குருதியை
உறுஞ்சும் அட்டைகளை அகற்றிடு
சிந்திக்கத் தெரியாத
சமூகத்தை உருவாக்கிய
கூத்தாடிகள் கூத்தை அடக்கிடு.

தமிழனே !விழித்திடு ! புதிதாய்
உறக்கத்தை கலைத்து நீ விழித்திடு.
இனித்தான் உனக்கு நல்ல விடிவு காலம்
சங்கொடுத்து மெல்ல முழங்கிடு.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹