இசைத்தாய்.... இசைத்தாய்...
என்னவோ உன் குரலிசையில்
மனம் மயங்கி
மந்திர கீதங்கள் பாடுதே....
துள்ளும் இசையில்
துள்ளித் துள்ளி மனம்
வெள்ளைமுகில் அலையில்
து(டி)ளி நடனம் ஆடுதே.....
கள்ளில் மயங்கும் வண்டாய் மனம்
தெள்ளிசையில் மயங்கி மயங்குதே...
இரவு நிசப்தத்தில் உன்குரல் மட்டுமே
இனிய தாயாய் வருடுதே...
இசையும் தாளமும் ஒன்றி உன்குரல்
சுடர வைக்குதென் சிந்தையை
படரும் நீர் நிலை உயர உயர
எழுகை கொள்ளுதே மனத் தாமரை.
வருவாய் நிதமும் சுடராய் ஒளிர
தருவாய் குரலமுது குழைத்தூட்டுவாய்
சருகும் சிறகசைக்கும் இசையின்ப காற்றில்
மலர்வாய் மலர்வாய் இசைக்குயிலே.....
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija
Comments
Post a Comment