இளஞ்செழியன் அண்ணனுக்கு...

உடன் பிறவா அண்ணனே!
நீதிபதி இளஞ்செழியனே!
இலங்கை தலையில் பூத்த
யாழ்ப்பாணத்தை வழிப்படுத்தி
சீராக்க வந்த செங்கோலனே!

ஆலயத்தில் ஐயர் ஓதும்
மந்திர உச்சாடணத்தின்
மகிமை கெட்டு
ஏதோ மணி இலையான்
மொய்ப்பதுபோல் அவலம் கண்டோம்.
ஆலயச் சத்தத்திற்கு 🔈🔈🔈
வைத்தீரையா ஆப்பு.
நன்றி நன்றி....

இன்னுமொரு வேண்டுகை
உண்டு அண்ணலே!
அதிகாலையில் பிள்ளைகள்
படிக்க முடியல.
கல்யாணக் கொண்டாட்டமாய்
கனரக ஒலி எழுப்பி
அசிங்கமூட்டும் பாடல்களும்
விரகமூட்டும் பாடல்களும்
வெட்கமற்றுப் போடுகின்ற
ஒவ்வொரு வீட்டாரிற்கும்
இந்தச் சட்டம் போட்டிடுங்கள்.

வயோதிபர்கள் குழந்தைகளின்
தூக்கத்தை கெடுக்கின்றார்.
வளரும் இளஞ் சந்ததியின்
மூளைத்திறனைக் குறைக்கின்றார்.
கெட்ட கெட்ட செய்திகளை
மூளையிலே பதிக்கின்றார்.
இதயநோயாளிகளும்
உயர் அழுத்தம் உடையோரும்
பெருஞ்சிரமம் அடைகின்றார்.
இதை ஒருக்கால் கவனத்துடன்
எடுத்திடுங்கள் நீதியரசே.

பறவைகளின் பாடல்களை🐔
ரசிக்கவேணும் யாவருமே.
அதிகாலை இயற்கை காற்றில்
சலசலக்கும் இலைகளின் ஓசை...🍃🍃🍃🍃
சிறுகுருவியின் மெல்லிய தாளம்...🐦🐦🐦
சட சடத்துப் பறக்கும்
பறவைகளின் இறகின் ஒலி...🐧🐧🐧
சத்தமற்ற உலகைத் தழுவி முத்தமிடும் முற்றத்து மல்லிகைவாசம்....💐💐💐💐
முகர்ந்து  எங்கள் சந்ததி
இன்புற்றுப் படிக்க வேண்டும்.

உங்களால் முடியும் அண்ணா..
எங்கள் சந்ததிக்கு கிடைத்த
நல்ல காவல் தெய்வம் நீங்கள்.
போற்றி வணங்குகிறேன் அண்ணா
உன் பொன்னடியை கோடிமுறை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹