மன்னித்துவிடு உன்னை நான் சந்திக்க விரும்பவில்லை.

வாழ்க்கை ஒரு வட்ட வடிவம்.
சிலருக்கு வட்டங்களை அடிக்கடி
தொட்டுத் தொட்டு சந்திக்க முடிகிறது.
அது வரமாகக் கூட இருக்கலாம்.

இதோ!
இந்த நிமிடம் வரை
வானம் பார்த்த பூமி போல....
தென்றலைத் தேடும் மலர் போல...
உன்னைச் சந்திப்பேன் என்று
அகம் மலர்ந்திருந்தேன்.-ஆனாலும்
உன் வார்த்தையில் தகதகப்பாய்
பரவிய  தீயின் கனதி...
மீள் சுழல்வதால் பொசுங்குகிறேன்.

"""அடையாள மரியாதை செய்ததாய்"""
அன்று பகர்ந்த மொழி
இன்றும் நோகிறது.- நானும்
மனித தசையாலும் இரத்தத்தாலும் ஆன
ஆள் என்பதை மறந்தாய்.!???

தெரு நாய்க்கான மதிப்புக் கூட
என் அழைப்புக்கு நீ தரவில்லை. கொலைகாரருக்குக் கூட
சிறைக்காவலர்கள் கருணை காட்டுவர்.-நீ
நீ  விசமங்களால் கொன்றாய்.
அவசியமற்ற உன் புறக்கணிப்புக்கு
விடை  இன்னும் தேடுகிறேன்.

இன்னொருமுறை  நான் விரும்பிய
உன் அழகான விழிகளில்
நெருப்பையும் நிந்திப்பையும் பார்த்து
பத்தி எரிய என்னால் முடியாது.

ஒரு தெரு ஓரப் பாடகனாய்
என் பயணங்கள் நீளட்டும்.
மன்னித்து விடு உன்னை நான்
சந்திக்க விரும்பவில்லை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹