காவிரியின் கண்ணீர்....
நிழல் யுத்தத்தில்
பலியாகுது பாரத நாடு.
வல்லரசுச் சதியில்
இந்தியத் தாயின் கருவறையில்
கள்ளத்தன கருக்கலைப்பில் ஒன்றாய்
காவிரி நதி....பலியாகுது.
குருதிக்குளியலில் பாரதப்பிள்ளைகள்.
உள்வீட்டு மோதல்கள்
கன்னம் வைத்தோர்க்கு
கண்ணுக்கு குளிர்ச்சி.
எட்டப்பர்கள் இன்றும்
பிறந்துள்ளதால்
ஆட்சியாளர் சிம்மாசன வெறியில்
பேரம் பேசலில் சோரம் போகிறார்.
பாரதத்தின் குருதிப் படையல்
வெள்ளைப்பேய்களுக்கு விருந்தாய் வேணுமாம்.
நிழலாய் தொடரும் போர்ச்சதியில்
நிலப்பிரிவு .....
நதிப் பிரிவு......
சாதிப்பிரிவு.....
ஏற்றப்பிரிவு....
பாரதப் பிள்ளைகள் வீரியமற்ற
மூடப் பிள்ளைகளாய்
முட்டி மோதிச் செத்து நாறினால்
வல்லரசுச் சதி வந்தேறும்.
ஈழப்போருக்குள் நுழைந்த
நோர்வே ஆமையாய்
இந்தியத் தாய்க்கும் வந்தது
கெடு காலம்.
மூன்றாந்தரப்புகள் சீர்ப்படுத்த வந்திடும்.
அரசியல் சாணக்கியமாய்
காலங்கள் நீளும்.
பாலின மாற்றம் போல
பல எட்டப்பர்கள் ஊசி மருந்தேற்றலில்
உருவாகி எழுந்து வருவர்.
ஈழப்போர் போல் பாரதமும் எரியும்.
காவிரி கண்ணீராலும் செந்நீராலும்
பாரதத்தில் பிறந்ததற்காக
ஓலமிட்டு அழும் ஓசை.....
வெள்ளைப் பிசாசுகளுக்கு
இன்னிசை விருந்தாகும்.
நிழல் யுத்தத்தில்
பலியாகுது பாரதம்.
காவியின் கண்ணீர்...
நீளமாய்.... நீட்சியாய்....
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija
Comments
Post a Comment