காதல் விலைமதிப்பற்றது.


இதயமே நீ என்றும் காதலித்துக்கொண்டிரு
இனிய நினைவுகளை...
இனி வரும் சவால்களை...
இதமான தென்றலை...
இரவின் நிசப்தத்தை..
காற்றில் மலரும் கீதத்தை...
காதலி காதலி காதலி
தேசத்தை மொழியை...
அமாவாசை இருளை....
ஆர்ப்பரிக்கும் கடலை....

இதயமே நீ என்றும்
காதலித்துக் கொண்டிரு
நீரோக்களாய் பிடில் வாசிக்காது
நிதர்சனம் உணர்ந்து காதலி.
பார்த்துப் பார்த்துப் பூப்பது காதல்..
தோற்றுப் போதல் காதலுக்கில்லை.
தோற்றால் அது காதலுமில்லை.

காதலுக்காய் காத்திரு..
வெட்கப்படாமல் காத்திரு...
மதகுகளில் தெருக்களில் அல்ல
காத்திருப்பு மனதோடு....முழுமனதோடு...
காதல் என்று தெருத்தெருவாய் அலையாதே!
காதல் அலைச்சல் அல்ல.
மன உளைச்சல் அல்ல.

இமைகளைப் பார்
இரு விழிகளைப்பார்
ஒன்றை ஒன்று பார்த்ததில்லை.
பாசத்திலும் குறைந்ததில்லை.
பார்க்காத விழிக்கிருக்கும்
பக்குவ நிலை பார்த்துப் பார்த்து
பூத்த காதலுக்கு உதிர்ந்திடுமா?
விட்டுக்கொடு.... விட்டுக் கொடு
விலை மதிப்பற்றது காதல்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹