பிறைநிலாவில் நகருலா
----------------------------------------------
பிறைநிலாத் தேரேறி உன்னோடு
நகருலா வர வேண்டும்-இந்த
வானக் கடல் வீதியில்.
கொடிமலர் ஓடிப்பூத்த விண்மீன்
கொய்துன் கார்குழலில் -வீர
வாகைப் பூச்சரமாய்
சூடி நான் மகிழ வேணும்.
சில்லெனச் சிறகடித்து நெஞ்சைக்
கொல்லும் உன் கண்ணழகில்
பட்டாம் பூச்சியாகி சுற்றிப்
பறந்திட வேணுமெல்லோ.
தொட்டனைத்தூறும் உந்தன்
முத்தத்து நீர்ச்சரத்தை தென்றலும்
திருடிடாது நல்ல
மேகத்திரையிழுத்து மூடி
மெல்லப் பருகிடணும்.
எந்தன் ஆவி திருடி விட்டு
ஏதும் தெரியாத ஆளாக நீ
பார்க்கும் பார்வையிலே
பிறைநிலா நாணிக் குதித்தோடுமே.
இந்த வானும் மயங்கியொரு
இன்ப நாதமாய் மழைதூவ
நல்ல நகருலப் போகணும் நாம்
இந்தப் பிறைநிலாத் தேரேறி.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
1:55 PM
குறிப்பு: இங்கு பிறைநிலா தேராகவும் ஓடமாகவும்.
Comments
Post a Comment