புதுப்புது அர்த்தங்கள்.


ஒரு புது மலர் பூப்பது போல
ஒரு குழந்தையின் வரவு போல
அனைத்துமே அழகாய்த்தான்
ஆரம்பிக்கின்றன.
பூக்களின் வாசனை போல
குழந்தையின் ஸ்பரிசம் போல
வருடும் இன்பக்கலவை
எப்போதும் அழகாகிறது.
தரிசித்த மலர்தல்
தரிசித்த உணர்வுகள்
நினைவுகளில் சலசலக்கும்
நீரோடைகளாக குளிர்த்தி செய்யும்
புதுப்புது அர்த்தங்கள்.
செவிப்பறையை நனைத்து நுழைந்த இனிய சொற்கலலை 
இதயத்தில்குளிர்களி போல 
ஜில் என்று
நனி குளிர் தருபவை.
நல்ல தொடக்கங்களுக்கு
மலர்தலும் பிறத்தலுமே
தொடர் பந்தம்.
நல்ல தொடக்கங்களை
இளந்தென்றல் கூட
ஆயுளை நகர்த்தாது அலங்கரிக்கும்.
நல்ல தொடக்கங்கள்
நித்தம் நித்தம்
பிறக்கும் கலையை
கருத்தோடு கற்பிக்கும்
நல் ஆசிரியர்கள்.



வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹