💚வன்னிமகள் தரும் ஹைக்கூ💚


(1)
விசிறிகள் சுழல்வதற்கு
//காற்று தேவை//
சுவாசம் சீர்மை பெற.
(2)
கண்களுக்கு அவசியம்
// கறுப்பு மணிகள்//
குழந்தைகளின் காப்பாக.
(3)
நிலவு பிரகாசிக்கிறது.
// சூரிய ஒளித் தெறிப்பு //
பச்சயத்தின் மறுமலர்ச்சி.
(4) கடும் வெயில் கொதிப்பு.
//வியர்வைத்துளிகள் பெருக்கம்//
வேலை மனிதர் சுறுசுறுப்பில்.
(5)
கைவிடப்பட்டு சுவர்கள்
//பாழடைந்து கிடக்கிறது//
விதவையின் நெற்றி.
(6)
மழலையின் பிடிவாதம்
// அழுகுரல் கேட்கிறது //
கல்லறைப்பாடல்களில்.
(7)
நுளம்புகள் பெருக்கம்
// வலைகள் ஆயத்தம்//
வீச்சு மீன் பிடிப்பதற்கு.
(8)
  காகிதங்கள் படபடக்கின்றன
// வெள்ளைத் தாள்களாக//
மலர்கிறது தாமரைப்பூ
(9)
துவிச்சக்கரவண்டி
//துள்ளிப்பாய்கிறது//
முயல்கள் வெருட்சியுடன்.
(10)
  இரவு மழை- மரங்கள்
    //கரும் பூதங்களாய்//
மேகங்கள் அணிவகுப்பு.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

மூகமூடி சிரிக்குது......... மனம் மூடி அழுகுது.